சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஹனுமன் மந்திரம்

By Sakthi Raj Jun 28, 2025 04:36 AM GMT
Report

வாழ்க்கையில் அனைவருக்கும் தைரியம் என்பது மிக மிக அவசியம். அப்படியாக, சிலருக்கு சில நேரங்களில் கால சூழ்நிலையால் அவர்கள் தன்னிலை இழந்து மன சோர்வு அடைந்து காணப்படுவார்கள். அவ்வாறான நிலையில் என்னதான் மனிதர்கள் உடன் நின்று ஆறுதல் சொன்னாலும் இறைவனும் காலமும் மட்டுமே அவர்களை மீட்டு கொண்டு வர முடியும்.

அப்படியாக, எவ்வளவு கெட்ட நேரத்தால் நம்முடைய மனம் உடைந்து கிடந்தாலும் நம்மை மிக பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடியவர் ஹனுமன் ஆவார். அவரை பற்றிக்கொண்ட எவரும் வீழ்ந்து போனது இல்லை. அந்த வகையில் ஹனுமனை வழிபாடு செய்ய மிக சிறந்த நாளாக சனிக்கிழமை உள்ளது.

அன்றைய தினத்தில் நாம் ஹனுமனை வழிபாடு செய்து காலையில் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நம் மனதில் வலிமையையும் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் விலகும்.

சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஹனுமன் மந்திரம் | Sanikilamai Solla Vendiya Hanuman Manthiram

சனிக்கிழமை அன்று சொல்லவேண்டிய ஹனுமன் மந்திரம்:

அஞ்சனை மைந்தன் ராமனின் பக்தன் ஆஞ்சநேயா போற்றி போற்றி !

நீங்கள் பிறந்த தேதி என்ன? உங்கள் ஆளுமையை சொல்லும் எண் கணிதம்

நீங்கள் பிறந்த தேதி என்ன? உங்கள் ஆளுமையை சொல்லும் எண் கணிதம்

 

மிகவும் எளிதான இந்த ஒருவரி மந்திரத்தை நாமும் படித்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க குழந்தைகள் மிக சிறந்த புத்திசாலியாகவும், எதையும் கடந்து சாதிக்கும் ஆற்றலும் பெறுவார்கள்.

ஆனால், நமக்கு கிடைக்கும் வலிமையையும் அறிவையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அவை நம்மையே அழித்து விடும்.

மேலும், நீங்கள் எப்பொழுது எல்லாம் மனம் சோர்ந்து செய்வதறியாது தவிக்கின்றீர்களோ அப்பொழுது இந்த மந்திரத்தை மனதில் சொல்லிக்கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகும் என்ற தைரியத்தை ஹனுமன் கொடுப்பார்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US