ஜோதிடம் என்பது மிக பெரிய கடல். ஜோதிடத்தை ஆராய நாம் எண்ணற்ற விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் அமாவாசை யோகம் இருந்தால் அவர் வாழ்க்கையில் மிக பெரிய உயரத்திற்கு செல்வார் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் அமாவாசை யோகம் என்றால் என்ன? இந்த அமைப்பு ஜாதகத்தில் எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.
ஒருவர் ஜனன ஜாதகத்தில் பிதுர்காரகன் என்று அழைக்கப்படும் சூரிய பகவானும்,மாதுர் காரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவானும் இணைந்து இருந்தால் உருவாகும் யோகமே அமாவாசை யோகம் ஆகும். இதில் குறிப்பாக சந்திரன் வலிமை குறையாமல் இருக்க வேண்டும்.
அதிலும், வைகாசி மாதம் மற்றும் ஆடி மாதம் வருகின்ற அமாவாசை தினத்தில் பிறந்தால் மிகவும் நல்லது. இவ்வாறு இந்த அமாவாசை யோகம் உடைய ஜாதகர் அறிவில் சிறந்து விளங்குவார். இவருக்கு இயற்கையிலே கற்பனை திறன் அதிகம் இருக்கும்.
எதையும் நுட்பமாக யோசித்து செய்யக்கூடிய திறமை படைத்தவர்கள். தாய் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இந்த அமைப்பு கொண்டவர்களுக்கு அரசியலில் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
இந்த இணைவுகளில் சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு மிக சிறந்த பலனைக்கொடுத்து விடும். இவர்களுக்கு கதை, கவிதை, வசனம் எழுதுவது என்று கலைத்துறையில் ஆர்வம் அதிகமாகவும், மிக பெரிய சாதனையாளராகவும் வருவார்கள்.
பிறருக்கு கஷ்டம் என்று வந்து விட்டால் இவர்களிடம் ஆலோசனை கேட்பது சிறந்த பலன் அளிக்கும். ஒரு சிலருக்கு இந்த அமாவாசை யோகம் அரசியலில் மிக உயரத்திற்கு கூட்டி செல்லும்.
ஆனால், இவ்வாறான அமைப்புகளில் சந்திரன் வலிமை குறைந்து இருந்தால் அந்த நபருக்கு மன ரீதியாக சில பிரச்சனைகளை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |