பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

By Sakthi Raj Jul 13, 2024 08:00 AM GMT
Report

நம்முடைய மனித வாழ்க்கையில் அனைவரும் செழிப்பாக வாழவேண்டும் என்று தான் எண்ணம் இருக்கும்.அப்படி இருக்க ஒருவரது வாழ்க்கையில் ஒவ்வொரு யோகம் பெற ஒவ்வொரு கடவுளின் அனுக்கிரகம் வேண்டும்.

அந்த வகையில் ஒருவர் கோடீஸ்வர யோகம் பெற கண்டிப்பாக அஷ்டலக்ஷ்மியின் அருள் பெற வேண்டும். ஒருவர் அஷ்டலக்ஷ்மியின் வழிபாடு பெற அஷ்டமி திதியில் அம்மனை வழிபாடு செய்வது அவசியமாகும்.

அப்படி ஒருவர் அஷ்டலக்ஷ்மியின் அருளை பெற எப்படி வாழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு | Ashtalakshmi Amman Vazhipadu Kodeswara Yogam

இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலேயே செய்யலாம்.

இந்த வளர்பிறை அஷ்டமி வருகின்ற ஜூலை மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த தீபத்தை காலையில் 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் இருக்கக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். அந்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்ற முடியாதவர்கள் காலை 7:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் அல்லது 11:00 மணியிலிருந்து 12:00 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுதல் ஏன் தெரியுமா?

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுதல் ஏன் தெரியுமா?


விளக்கு ஏற்றிய பிறகு வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொண்டு அந்த தாம்பாள தட்டில் ஒன்பது அகல் விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும்.

இதில் எட்டு அகல் விளக்குகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு அகல் விளக்கு இருப்பது போல் வைக்க வேண்டும். இந்த எட்டு அகல் விளக்குகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

நடுவில் இருக்கக்கூடிய அகல் விளக்கிற்கு நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபங்கள் அனைத்துமே வடக்கு பார்த்தவாறு வைக்கவேண்டும்.

இந்த தட்டை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு கீழ் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள்.

“ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம்”

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு | Ashtalakshmi Amman Vazhipadu Kodeswara Yogam

என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக மகாலட்சுமி தாயாருக்கு படைக்கலாம். மேலும் இந்த தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.

இப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்யும் பட்சத்தில் அஷ்டலட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கோடீஸ்வர யோகமும் உண்டாகும். நாம் எதை செய்தாலும் முழு நம்பிக்கையோடு செய்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும்.

ஆக இந்த மனதார செய்பவர்களுக்கு வீட்டில் பண கஷ்டங்கள் இருந்தாலும் நிவர்த்தி ஆகி இறைவன் நல் வழிகாட்டுவார்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US