நீங்க செய்ற அனைத்து காரியத்திலும் வெற்றியடைய வேண்டுமா? எதை செய்தாலும் இந்த நேரத்தில் செய்யுங்க
நாம் தினசரி செய்யும் வேலைகளை சரியான நேரத்தில் தொடங்குவது அவசியமாகும். சுக்கிர ஓரையில் செய்ய வேண்டிய காரியம் குறித்து தெரிந்து கொள்வோம்.
நாம் செய்யும் சில வேலைகளில் சறுக்கல் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை நாம் அதிகம் யோசிப்போம். இதற்கு முக்கிய காரணமாக வேலை தொடங்கும் நேரத்தையும் பலர் பார்க்கின்றனர்.
இந்த நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. அதில் மிகவும் சுபமானதும், வெற்றியளிக்கக்கூடியதும் சுக்கிர ஓரை.
சுக்கிர ஓரை என்றால் என்ன?
ஜோதிட கணிப்புகளில் ஒருநாளின் 24 மணி நேரத்தை 8 ஓரைகளாக பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஓரைக்கும் ஒரு கிரகம் அதிபதியாக உள்ளதாம்.
சுக்கிரன் (வெள்ளி கிரகம்) ஆட்சி செய்கிற ஓரைதான் “சுக்கிர ஓரை” எனப்படுகிறது. சுக்கிரன், இன்பம், கலை, இசை, பொழுதுபோக்கு, பணம், மகிழ்ச்சி, திருமணம், அழகு, அன்பு போன்ற அம்சங்களை பிரதிநிதித்துவம் செய்கிறார்.
எனவே, இவரது ஓரையில் இந்தத் துறைகளுடன் தொடர்புடைய வேலைகளை செய்ய மிகச் சிறந்த நேரமாகும்.
சுக்கிர ஓரையில் என்ன செய்யலாம்?
சுக்கிர ஓரையின் போது திருமண பேச்சு வார்த்தைகளை பேசினால், வெற்றிகரமாக முடிவதுடன், தடைகள் எதுவும் இல்லாமல் நல்ல முடிவினை எடுக்க முடியும்.
இசை, நடனம், ஓவியம் போன்ற துறைகளில் இருப்பீர்கள் என்றால், இதன் அரங்கேற்றம், தொடக்கத்தினை சுக்கிர ஓரையில் செய்வது நல்லது. ஏனெனில் புகழ் செல்வமு தேடி வருவதுடன், குருவின் ஆசியுடன் வளர்ச்சியடையவும் செய்யலாம்.
சுக்கிர ஓரையில் வெளியே ஷாப்பிங் செய்வது, துணிகள், நகைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறந்ததாகும். விருப்பமான பொருட்கள் கிடைப்பதுடன், மனநிறைவு அதிகமாகவே இருக்கும்.
இதே போன்று சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது, மாடு, கன்று போன்றவற்றினை வாங்குவது நல்ல வளர்ச்சியினை ஏற்படுத்துமாம்.
ஒருவருக்கு நீங்கள் விருந்தளிக்க நினைத்தால் சுக்கி ஓரையில் செய்யலாம். இது மகிழ்ச்சியாகவும், அழகாகவும் அமைவதுடன், மனக்கசப்பு இல்லாமல் விருந்தும், சுப நிகழ்ச்சியும் சந்தோஷமாகவே முடியும்.
சுக்கிர ஓரையில் சமைப்பது, இனிப்பு செய்வது வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், மிச்சம் ஏற்படாமலும் இருக்குமாம்.
பரிசு அனுப்புதல், யாருக்காவது பரிசு கொடுப்பது பொருளின் மதிப்பை பல மடங்கு அதிகரிக்கும். பரிசுகளை பெறுபவர்களும், கொண்டாடி மகிழ்வதுடன், உறவும் உறுதி பெறுமாம்.
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
சுய தொழில் செய்பவர்கள் சுக்கிர ஓரை எப்போது வருகிறது என மனதில் பதிய வைத்துக்கொண்டால், அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.
பணம் சம்பந்தமான விவகாரங்கள் சுக்கிரன் பணத்தின் அதிபதி என்பதால் சுக்கிர ஓரைக்கும், பணத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. நீங்கள் யாரிடமாவது கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் இருந்தால், அந்த நபரை சுக்கிர ஓரையில் சந்தியுங்கள். பணம் திரும்ப வரும் வாய்ப்பு அதிகம்.
எதை தவிர்க்க வேண்டும்?
சுக்கிர ஓரை ஒரு பூரணமான நல்ல நேரம் என்றாலும், ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக, குறிப்பாக கண் சிகிச்சைக்கு புறப்பட வேண்டாம். மற்றபடி, எல்லா வேலைகளுக்கும் இந்த ஓரை ஏற்றதுதான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |