ஆகஸ்ட் மாதத்தில் வரும் அபூர்வ பிரதோஷம் பற்றி தெரியுமா?
பிரதோஷம் என்றாலே சிவபெருமானுக்கு உகந்த நாள்.அப்படியாக அந்த நாளில் நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட நம் வாழ்க்கையில் நினைக்கும் அனைத்து காரியமும் நடக்கும்.
அப்படியாக இந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷம் தான் வரும்.
ஆனால் இந்த குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது
1. 01.08.2024 ஆடிமாதம் குருவார பிரதோஷம்
2. 17.8.2024 ஆவணி மாதம் சனிப்பிரதோஷம்.
3. 31.8.2024. ஆவணி சனி மஹா பிரதோஷம்
இந்த மாதிரி பிரதோஷம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தொடர்ந்து மூன்று பிரதோஷ வழிபாடு செய்தால் தடைபெற்ற திருமணம் நடைபெறும்,குழந்தை பாக்கியம் ,கடன் பிரச்சனை தீரும்.
ஆக பிரதோஷ நாட்களில் இந்த நாளில் என்ன மாறிவிடப்போகிறது என்று சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் சிவபெருமானை மனதில் நினைத்து வழிபட மனதில் நீண்ட இருந்து வந்த துன்பம் விலகி மகிழ்ச்சி பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |