வீட்டிற்கு விருந்தினர்கள் வருவது போல் கனவு வந்தால் கவனமாக இருக்க வேண்டுமாம்
கனவு என்பது நாம் தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. சில நேரங்களில் நாம் அன்றைய நாள் சந்தித்த முகங்கள் அல்லது பார்த்த விஷயங்கள் கனவில் வருவதை கவனிக்கலாம். சில நேரங்களில் அறிமுகமே ஆகாத ஏன் இதுவரை பார்த்திடாத முகங்கள் கூட கனவில் வருவதுண்டு. அந்த வகையில் நம்முடைய வீட்டிற்கு விருந்தினர்கள் வருவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

கனவின் அர்த்தம் என்ன?
ஒருவர் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவது போல் கனவு கண்டால் அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் நீண்ட நாட்களாக அவர்கள் இழந்த மதிப்பையும் செல்வாக்கையும் பெறப்போகிறார்கள் என்பதையும் அவை குறிக்கிறது.
சமயங்களில் விருந்தினர்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டால் நீங்கள் புதிய நட்புகளின் அறிமுகத்தால் மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் முன்னேற பெறப்போகிறீர்கள் என்பதையும் அவை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

மேலும் இவ்வாறான கனவுகள் வரும்பொழுது உங்களுக்கு வேலைகள் திடீர் மாற்றம் சம்பள உயர்வு நினைத்தது போல் இடம் மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வருகிறது.
அதேபோல் நீங்கள் ஒரு நண்பரை சந்திப்பது போல் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு வருவது போல் கனவு கண்டாலும் இதழ் நினைத்த காரியம் மகிழ்ச்சியான நிலையில் முடிவைப் பெறும் என்பதையும் குறிப்பதின் அறிகுறியாக இருக்கிறது.

சமயங்களில் அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களுடைய கனவில் வரும் பொழுது வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான அறிகுறியாக அவை காணப்படுகிறது. சில நேரங்களில் அந்த முகமானது நம் நினைவிலே இருக்கும். அவ்வாறு இருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கும் நமக்கும் முன் ஜென்மத்தின் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |