50 ஆண்டுக்கு பின்பு நடைபெறும் கிரக சேர்க்கை: எந்தெந்த ராசிக்கு பொற்காலம் தெரியுமா?
50 ஆண்டுக்கு பின்பு தொடங்கும் ஆதித்ய யோகத்தினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது சில தருணங்களில் பாதிப்பையும், சில தருணங்களில் அதிர்ஷ்டத்தையும் அளிக்கின்றது.
அந்த வகையில் ஜுன் 15ம் தேதியான இன்று சூரிய பகவான் ரிஷப ராசியினை விட்டு மிதுன ராசிக்குள் நுழைகின்றார்.
புதனும், குருவும்(வியாழன்) ஏற்கனவே மிதுன ராசியில் உள்ள நிலையில், மூன்று முக்கியமான கிரகங்களின் சந்திப்பானது பிரம்ம ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த கிரகங்களின் சந்திப்பானது மிகப்பெரிய வெற்றியையும், நம்பிக்கையையும் கொடுக்கின்றது. நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் நிலையில், பதவி மற்றும் சம்பள உயர்வை பெறுவதுடன், புகழும், சமூகத்தில் நற்பெயரும் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பழைய சண்டை, சச்சரவுகளும் தீர்வுக்கு வரும். ஆரோக்கியம் மற்றும் மன அமைதி மேம்படுவதுடன், புதிய வேலையும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த ஆதித்ய யோகத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும், வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்விலும் வெற்றி பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியினருக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடைய தொடங்குமாம். சமூக கௌரவம் அதிகரிப்பதுடன், செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பது உங்களுக்கு புதிய வாய்ப்பினை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்படுமாம்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த யோகம் அதிர்ஷ்டத்தை தருணம் நிலையில், வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் வாங்க வாய்ப்பு உள்ளதாம். பதவி மற்றும் கௌரவம் அதிகரிப்பதோடு, மரியாதையும் அதிகரிக்கக்கூடும். பெற்றோருடனான உறவுகள் மேம்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |