இந்த எண்ணில் பிறந்தவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, குறிப்பிட்ட சில எண்ணில் பிறந்தவர்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அவை எந்த எண் என்று பார்ப்போம்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எல்லா வேலைகளையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்யக்கூடியவர்கள். அவர்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றியை தேடிக்கொடுப்பவர்கள். மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். இவர்கள் அதிக அளவில் அனுபவத்தை சேகரித்து அதன் வழியாக வெற்றி அடையக்கூடியவர்கள்.
எண் 14:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் திறமையானவர்கள். இவர்களிடம் இயல்பாகவே தலைமைத்துவம் பண்புகள் உண்டு. எதிர்காலம் பற்றிய சிந்தனை இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். தான் இறக்கும் முன் நாம் மிக பெரிய சாதனை செய்யவேண்டும் என்று தீர்க்கமான எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். வியாபாரம் செய்வதில் இவர்கள் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.
எண் 21:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிக சிறந்த அறிவு ஆற்றல் படைத்தவர்கள். புது புது விஷயங்கள் கற்று தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் படைத்தவர்கள். இவர்கள் சமுதாயத்தில் நல்ல வளர்ச்சியை அடையக்கூடியவர்கள். தங்கள் பேச்சு திறமையால் எதையும் சாதிக்கும் அதீத திறன் படைத்தவர்கள். கலை துறையில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 23:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள். புதிய விஷயங்களை தேடி படிப்பதில் இவர்களுக்கு அதிக அளவில் ஆர்வமும் திறமையும் உண்டு. எல்லோரிடத்திலும் அதிக அளவில் அன்போடு பழக்கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |