எல்லா நாளும் இனிய நாளாக அமைய என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையை நமக்காக ஒலித்துவைத்திருக்கின்றது.துன்பம் வரலாம் இன்பம் வரலாம் இல்லை புதிதாக ஏதேனும் அதிசியங்கள் வாழ்க்கையில் நடக்கலாம்.
அனைத்தையும் வரவேற்கவும் எதிர்க்கொள்ளவும், ஏற்று கொள்ளவும் ,நாம் தயாராக இருக்கவேண்டும்.
நாம் ஓடும் வாழ்க்கையில் உண்மை என்பது ஒரு நாள் எதுவும் இல்லாமல் போவது.மேலும் அதன் பெயர் தான் மாயையை.மாயையின் மறு பெயர் தான் வாழ்க்கை .அதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாழும் நொடியை காட்டிலும் இறக்கும் நொடியே நாம் வாழ்ந்ததற்கான சாட்சி. அப்படி இருக்க நம் மீது எத்தனை பெரிய நம்பிக்கை இருந்தாலும் நம்மை தாண்டி ஒரு சக்தி இந்த உலகத்தில் இயங்கி கொண்டு இருக்கின்றது.
அதை நாம் நம்ப வேண்டும்.அப்படி நம்பி வாழ்க்கையை வாழ தொடங்கும் பொழுது இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை வாரி வழங்கும்.
ஆனால் அதற்கெல்லாம் மூன்று முக்கியமான விஷயம் தேவை நம்பிக்கை,பொறுமை,கடமை.
இறைவனை நம்பிக்கையோடு பொறுமையோடு வழிபட்டு அவர் நமக்கு கொடுத்த வாழ்க்கையில் கடமை தவறாமல் வாழ ஒவ்வொரு நாளும் இனிய நாளே.மேலும் அந்த நாளை இனிமையாக்க தினமும் திருமூலர் எழுதிய இப்பாடலை பாடுவோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்