சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
சுவாமிநாத சுவாமி கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும்.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி நதியின் கிளை நதியின் கரையில் அமைந்துள்ளது.
ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் வருடா வருடம் சித்திரை மாதத்தில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, முக்கிய விதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்த பின் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |