21 தலைமுறை தோஷங்களை போக்கும் தேங்காய் பரிகாரம்

By Sakthi Raj Oct 03, 2024 08:43 AM GMT
Report

நம்முடைய குடும்பத்தில் நமக்கே தெரியாமல் சில தோஷங்கள் ஏற்பட்டு இருக்கும்.அதனால் பல பாதிப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.அந்த பாதிப்புகள் எல்லாம் கால போக்கில் தான் நமக்கு தெரியவரும்.அப்படியாக ஆன்மீகத்தில் நம்முடைய பாதிப்புகளுக்கு தோஷங்களுக்கும் நிவர்த்திகள் இருக்கிறது.

இப்பொழுது நம்முடைய குடும்பத்தில் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் பரிகாரத்தை பற்றி பார்ப்போம். இந்த பரிகாரத்தை நாம் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும்.ஆண் பெண் இருவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.தானங்களில் பல வகை இருக்கிறது.

21 தலைமுறை தோஷங்களை போக்கும் தேங்காய் பரிகாரம் | Coconut Parigarangal

அதில் ஒரு மிக பெரிய சக்தி வாய்ந்த தானம் பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதாவது 21 தலைமுறை பாவமும் தோஷமும் கழிய 21 தேங்காய் வாங்கி தானம் கொடுக்கவேண்டும்.மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி நம் கையால் அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

கோவில் வாசலில் இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள் கைகளால் தானம் கொடுக்கவேண்டும்.மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக் கூடாது. ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும் தோஷமும் கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நவராத்திரி வீட்டில் கொலு வைக்காதவர்கள் செய்யவேண்டிய பூஜைகள்

நவராத்திரி வீட்டில் கொலு வைக்காதவர்கள் செய்யவேண்டிய பூஜைகள்


இப்படியாக ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே வரும்.

பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைவதை பார்க்கமுடியும். குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US