இன்றைய ராசி பலன்(23-04-2025)
மேஷம்:
நேற்று இருந்த பணி சுமை இன்று குறையும். எதையும் தீர்க்கமாக ஆலோசித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
இன்று வேலையில் உங்கள் பணியாளர்கள் ஒத்துழைப்பால் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். இன்று உங்களுக்கு வரும் போட்டிகளை தைரியமாக சமாளிப்பீர்கள்.
மிதுனம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத முக்கிய செய்திகள் வந்து சேரும். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்:
மனதில் பயம் உண்டாகும். நெருங்கியவர்கள் வழியாக ஆதாயம் கிடைக்கும். நினைத்த வேலையை செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுக்கள் பெரும் நாள்.
சிம்மம்:
தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கன்னி:
உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மருத்துவ செலவுகளை சந்திக்கும் நாள். தாய் வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பங்களோடு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
துலாம்:
இன்று வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்:
சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலையை கையில் எடுத்து வெற்றி காண்பீர்.
தனுசு:
குடும்பத்தில் சில வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெரும்.
மகரம்:
மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் முயற்சி லாபமாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கும்பம்:
குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடக்கும். புதியவர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
மீனம்:
இன்று மனதில் எண்ணற்ற சிந்தனைகள் ஓடும். உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்பட்டு வெற்றியில் முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |