நல்லது நடக்க 48 நாள் சொல்ல வேண்டிய மந்திரம்

By Sakthi Raj Jun 10, 2024 09:30 AM GMT
Report

 அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்.

இதை தினமும் சொல்லி வர மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.

மேலும் இந்த மந்திரம் சொல்லும் பொழுது பிரசாதமாக காட்சியை பால் அல்லது வெல்லம் எலுமிச்சை பானகம் இருக்க வேண்டும்.

எவர் ஒருவர் நரசிம்மரை மனதார நினைத்து 48 நாள் சொல்கிறார்களோ அவர்கள் மனதில் நினைத்த காரியமும் வாழ்க்கையில் நல்லதும் நிச்சயமாக நல்ல மாற்றங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

இந்த ஸ்லோகம் முறைப்படி உச்சரிக்க முடியாதவர்கள், சொல்ல இயலாதவர்கள், கீழ்க்கண்ட வாக்கியங்களைச் சொல்லி வழிபடவும்.

நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை நண்பராக இருப்பவனும் நரசிம்மனே, செல்வமாக திகழ்பவனும் அவன் தான். அறிவும், செல்வமாக திகழ்பவனும் அவனே நம் எஜமானனாகவும், எல்லாமுமாக இருப்பவன் அவன் தான். பூலோகம், விண்ணுலகத்தை ஆள்பவன் நரசிம்மனே, எங்கு சென்றாலும், அங்கு எல்லாம் நரசிம்மனே இருக்கிறான். நரசிம்மனைக் விட உயர்ந்தவர் யாருமில்லை. அதனால் நரசிம்மனே உம்மைச் சரணடைகிறேன்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US