2025ல் குருவின் அருளால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் யார்?
நவகிரங்களில் மங்களகரமாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.இவர் வருடத்திற்கு ஒருமுறை அவருடைய இடத்தை மாற்றுகிறார்.குரு பகவான் செல்வம் செழிப்பு பாக்கியம் குழந்தை பாக்கியம் வழங்க கூடியவராக இருக்கிறார்.மேலும் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக 2025 ஆம் குரு பகவான் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.அதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ஜாக்பாட் யோகத்தை கொடுக்க போகிறது.
கடகம்:
குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகிறார்.2025 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு சிறப்பாக அமைய போகிறது.நீங்கள் கால் வைக்கும் இடம் எல்லாம் வெற்றிகள் குவியும்.கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் விலகும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்:
குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் மீன ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான நன்மைகள் வழங்க போகிறது.பணவரவில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.பிள்ளைகள் வழியாக உங்களுக்கு பெருமை உண்டாகும்.
மிதுனம்:
குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உண்டான பிரச்சனைகள் எல்லாம் விலக போகிறது.எதிரிகள் தொல்லை படிப்படியாக குறையும்.ஒரு சிலருக்கு வீடு வாகனம் யோகம் உண்டாகும்.பொருளாதார ரீதியாக உண்டான கஷ்டங்கள் விலகும்.சகோதர சகோதிரி வழி நல்ல ஆதரவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |