குடும்ப குழப்பங்களை தீர்க்கும் ஆடி செய்வாய் வழிபாடு

By Sakthi Raj Aug 13, 2024 11:30 AM GMT
Report

ஆடி மாதம் முழுவதும் நம் மனதில் நிறைந்து இருப்பவள் அம்பாள்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதம்.பிற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் அம்பாளின் சக்தி அதிகம் இருக்கும்.ஆன்மீகத்தில் செய்வாய் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது.

அதிலும் ஆடி செய்வாய் வெள்ளி என்றால் கூடுதல் சிறப்பு.மேலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

இந்த செய்வாய் அன்று முருகனை வழிபட ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்களுக்கு தோஷம் விலகும்.அதாவது ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் நம் வாழ்க்கையில் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குடும்ப குழப்பங்களை தீர்க்கும் ஆடி செய்வாய் வழிபாடு | How To Overcome Family Issue

செவ்வாய் கிரகம் சக்தி, ஆற்றல் மற்றும் உற்சாகத்தை வழங்கக்கூடிய கிரகம் ஆகும்.ஆனால், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தோஷம் என்பது ஜாதகத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட கிரக அமைப்பாகும். இந்த அமைப்பு, நம் வாழ்க்கையில் சில தடைகளை ஏற்படுத்தும்.

ஆடி செவ்வாய் வழிபாட்டின் முக்கிய நோக்கம், இந்த தோஷங்களை சாந்தப்படுத்தி, நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதே.

வாழ்க்கையில் வெற்றி பெற முருகனை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்

வாழ்க்கையில் வெற்றி பெற முருகனை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்


அன்றைய நாளில் பஞ்சதீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு இரண்டு விளக்குகளை ஏற்றி, சாம்பிராணி தூபம் வீடு முழுவதும் போட வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் போக்கி நேர்மறை எண்ணங்களை உண்டாகும்.

மேலும் அன்றைய தினத்தில் மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி போன்றவற்றை அழகான தட்டில் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபடலாம்.

இவ்வாறு வழிபட வீட்டில் உள்ள தடங்கல் தீராத கடன் பிரச்சனை,வீட்டில் உள்ள குழந்தைகளின் படிப்பு மேலும் வியாபாரம் வாழ்க்கை வளமாக மாறும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US