ஜோதிடக்கலாநிதி ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனுக்கு விருது வழங்கி சிறப்பித்த நிகழ்வு
ஜோதிடம் என்பது கோள்களின் இயக்கம், நட்சத்திரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும்.
இந்த ஜோதிடத்தை முறையாக பயிற்சி செய்து அதை மக்களிடையே கொண்டு செல்பவர் ஜோதிடர் ஆவார்.
அந்தவகையில், தமிழ் சின்னத்திரை உலகில் ஒளிமயமயமான எதிர்காலம் எனும் ராசிபலன் நிகழ்ச்சியை கலைமாமணி ஜோதிடக்கலாநிதி ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை 5000 நாட்களை கடந்து 6 கோடி பார்த்து மகிழும் வண்ணம் ஜோதிட கலையில் சாதனை படைத்து வருகிறார்.
மேலும், தமிழ்நாட்டில் வெளிவரும் பிரபல பத்திரிக்கைகளில் இசை மற்றும் நடன விமர்ச்சனங்களை இவர் எழுதி வருகிறார்.
இந்நிலையில், ஜோதிடக்கலையில் முழுநேரமாக தன்னை ஈடுபடுத்தி வரும் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனுக்கு ஜோதிட சொல்வித்தகர் எனும் விருதை ஐபிசி குழுமம் வழங்கி சிறப்பித்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |