கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர இந்த வழிபாடு செய்யுங்கள்
குடும்ப வாழ்க்கையில் பொருளாதாரம் என்பது மிக முக்கியம்.இன்றைய கால கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலைக்கு சென்றால் கூடுமான அளவு குடும்பத்தை கவனிக்க முடிகிறது.
அப்படியாக சமயங்களில் அவர்களை வருமானத்தை தாண்டி எதிர்ப்பாராத குடும்ப கஷ்டம் ஏற்பட அவர்கள் பிறரிடம் கடன் வாங்கவேண்டி சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
அவ்வாறு கடன் வாங்கியவர்கள் வட்டி கட்டவே பாதி உயிர் போயிவிடும்.அப்படி ஆனவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை செலுத்தி கீழ்கண்ட பரிகாரம் செய்ய விரைவில் கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்து விடலாம்.
முதல் பரிகாரத்திற்கு வில்வ இலை ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு அந்த வில்வஇலையை சுருட்டி ஏதாவது ஒரு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி பூஜை அறையில் வைத்து உங்களுடைய கடன்கள் யாவும் தீர்வதற்கு பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.அதன் பிறகு கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அந்த இலையை வேப்பமரத்தில் கட்ட வேண்டும் கோவில்களில் இருக்கும் வேப்ப மரத்தின் உச்சியில் சென்று வடக்கு பார்த்த கிளையாக பார்த்து கட்டி விடுங்கள் இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் இருக்கும் கடன் தொகைகள் அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்
கடன் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் இறைவனை முழுமையாக நம்புவது நல்லது.
மேலும்,பைரவருக்கு விளக்கு தீபமேற்றி வந்தாலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.
நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மிளகுகளை வைத்து கருப்பு துணியில் கட்டி பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடனும் காணாமல் காற்றில் கரையும் அவ்வரிசையில் இந்த வில்வ இலை பரிகாரமும் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |