துன்பங்கள் விலக நாளை(22-6-2025) செய்யவேண்டிய முருகப்பெருமான் வழிபாடு
கலியுக வரதன் முருகப்பெருமானுக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படியாக, நாளைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உரிய மிக முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது.
அப்படி நாளை என்ன விஷேசம் என்று பார்த்தால் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழமை, பரணி நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இந்த இரண்டு நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை கொடுக்கிறது.
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் துன்பம் வருவது மிகவும் இயல்பான விஷயம் என்றாலும், அதை கடந்து சென்று வாழ்க்கையில் வெற்றி பெறுவது தான் மனிதனின் சவாலாக இருக்கிறது. அவ்வாறு நாம் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் விலக எவ்வளவு தான் போராடி முயற்சி செய்தாலும் இறையருள் இருந்தால் கட்டாயம் நாம் நினைத்த விஷயம் கைக்குடி வரும்.
அவ்வாறு சந்திக்கும் துன்பங்கள் விலக நாளை செய்யவேண்டிய முக்கியமான முருகப்பெருமான் வழிபாட்டை பற்றி பார்ப்போம். நாளை கட்டாயம் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று 2 நெய் தீபங்கள் ஏற்றி, 6 செவ்வாழை பழங்களை முருகப்பெருமான் பூஜைக்கு கொடுத்து அர்ச்சனை செய்து கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு, “ஓம் கதிர்வேலாய நமஹ” என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே, முருகப்பெருமானை 6 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாட்டை முடித்து வெளியே வந்து கோவிலில் இருந்து வாங்கிய அந்த 6 வாழைப்பழங்களையும் யாசகம் கேட்பவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.
இவ்வாறு செய்ய வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும். மேலும், இந்த வழிபாட்டை செய்பவர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால் காலை வேளையில் செய்வது சிறந்த பலன் கொடுக்கும். மற்றவர்கள் இந்த வழிபாட்டை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |