லக்னத்தில் கேது உள்ளவர்களை எப்பொழுதும் கடவுள் கைவிடுவதில்லை- காரணம் தெரியுமா?
ஜோதிடத்தில் லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படியாக, யாருக்கு எல்லாம் லக்னத்தில் கேது உள்ளதோ அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் சந்தித்தாலும் அவர்களை கடவுள் கைவிடுவதில்லை.அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி பார்ப்போம்.
பொதுவாக லக்னத்தில் கேது இருப்பவர்கள் இந்த பிறவியில் பல விதமான துன்பங்களை அனுபவிக்கவும், பல மனிதர்களுடைய உண்மை குணாதிசியங்களை தெரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் பல இடர்பாடுகளை எதிர்கொள்ளவும், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடைகளை சந்திக்கவும், எவரும் உலகத்தில் பெறாத அனுபவங்களை சேகரிக்கவும், இந்த ஜென்மத்தின் உண்மை நிலை அறியவும், உலகம் மறந்த விஷயங்களை உலகிற்கு எடுத்துரைக்கவும், தனிமையின் ஆற்றல் உணரவும், ஆன்மீகத்தை உணர்ந்து தெரியவும், தத்துவம் கற்று கொடுக்கவும், பிறவி பாவத்தை கழிக்கவும், மோட்சம் அடைய வழி தேடவும் சிவனின் பக்தியை உலகிற்கு உணர்த்தவும், பிறவா வரம் வேண்டவும், அவர்கள் தேடி அலைவார்கள்.
ஆனால் எத்தனை இடர்கள் வந்தாலும் அவர்களை கடவுள் ஒருபொழுதும் கைவிடமாட்டார் என்பது தான் உண்மை. இவர்களை பொறுத்த வரையில் துன்பம் கொடுப்பதும் இறைவனே, அதில் இருந்து காப்பாற்றுவதும் அவனே.
ஆக, லக்கினத்தில் கேது இருந்தால் அதிக பிரச்சனைகளை சந்திப்பவர்களும் அவர்களே, அதில் இருந்து வெகு விரைவில் மீண்டு வருவதும் அவர்களே. இவர்கள் கட்டாயம் இறக்கும் முன்பு முக்தி அடையும் நிலையை தொட்டு விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |