அமாவாசை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் அமாவாசை மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் பல்வேறு தெய்வீக அம்சங்கள் பொருந்திய நாளாகும். அப்படியாக, அமாவாசை நாளை பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள் உள்ளது. அதை பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக தமிழகத்தில் தெற்கு பகுதியில் அமாவாசை சுபதினமாக பார்க்கப்படுவதில்லை. காரணம், அன்று நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றோம் என்பதால். மேலும் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் அவர்கள் சுபகாரியங்கள் செய்வதையும் பேசுவதையும் தவிர்க்கிறார்கள்.
ஆனால், வடக்கு பகுதியை எடுத்துக்கொண்டால் அங்கு அமாவாசையை யாரும் இவ்வாறு கருதுவது இல்லை. அவர்கள் நிறைந்த அமாவாசையில் தான் புதிய வண்டி வாங்குவது, தொழில் தொடங்குவது, பத்திரம் முடிப்பது போன்ற செயல்கள் செய்கிறார்கள்.
இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அமாவாசை தினத்தை நல்ல நாளாக பார்க்கப்படுவதில்லை. அப்படியாக, அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? என்று பார்ப்போம்.
இந்த அமாவாசை தினம் அன்று சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் வந்து ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது. அன்றைய தினம் முன்னோர்கள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களுடைய தலைமுறையினரை கண்காணிக்கிறார்கள்.
அவர்களுடைய வாரிசுகள் செய்யும் காரியங்களை பார்த்து அவர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறார்கள். அதனால், அன்றைய தினம் முன்னோர்களை வழிபாடு செய்து அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி, அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை தொடங்கினால் கட்டாயம் நன்மையில் தான் முடியும்.
எந்த ஒரு தீங்கும் நடக்காது. அதே போல் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் அதீத வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அமாவாசை தினத்தன்று விபத்துகளும் அதிக அளவில் நடப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
இருப்பினும் அமாவாசை தினத்தன்று மந்திரங்கள் ஜெபித்து தங்களுடைய தோஷங்கள் விலக பலரும் புனித நதிகளில் நீராடுகின்றனர். அதோடு, அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
அமாவாசை அன்று செய்யக்கூடாதவை:
மேலும், அமாவாசை தினத்தன்று மாமிச உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அமாவாசை அன்று நாம் தலையில் எண்ணெய் வைக்கக்கூடாது.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடவும் பறிக்கவும் கூடாது.
அமாவாசை அன்று செய்யவேண்டியவை:
அமாவாசை தினத்தன்று நாம் அன்னதானம் செய்யலாம். நாம் செய்யும் அன்னதானம் எந்த உணவாக இருந்தாலும், அதில் எள் கொண்டு சமைத்த உணவு ஏதெனும் இருக்க வேண்டும். இதை எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுத்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |