இந்த கனவுகள் எல்லாம் வந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
மனிதனுக்கு கனவுகள் வருவது என்பது இயல்பானது என்றாலும், சமயங்களில் நமக்கு வரும் கனவுகள் நம் எதிர்காலத்தை பற்றி குறிப்பதாக அமைகிறது. அதாவது நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
அப்படியாக, நமக்கு எந்த கனவுகள் வந்தால் நாம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.
நம் கனவுகளில் பசுமாடு துரத்துவது போல் வந்தால் நமக்கு வர இருக்கும் மிக பெரிய கண்டம் இருப்பதை குறிப்பதாக சொல்கிறார்கள். அவ்வாறு வரும் பசு நம்மை முட்டாமல் அப்படியே விலகி சென்றால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றதாக அர்த்தம் என்கிறார்கள்.
நம் கனவில் பசு மட்டும் அல்லாமல் காளைகள் துரத்துவது போல் வந்தாலும் அவை நமக்கு இருக்கும் தோஷங்களை குறிக்கிறது.
அதே போல் கனவில் காகம் இறந்து கிடப்பது போல் வந்தால், நாம் நம்முடைய பித்ரு கர்மங்களை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம். அவ்வாறு கனவு வந்தால் அமாவாசை நாட்களில் நாம் பித்ரு கடமைகளை செய்தால் பிரச்சனைகள் தீரும்.
பூனை நம் கனவில் இறந்து கிடப்பது போல் வந்தால் நமக்கும் நெருங்கிய உறவுக்கும் சில விரிசல் வரப்போவதை உணர்த்தும் அறிகுறியாகும்.
பொதுவாக, பாம்பு அவ்வளவு எளிதாக கனவில் வராது. அவ்வாறு கனவில் பாம்பு இறந்து கிடப்பது போல் வந்தால் அது நமக்கு சர்ப்ப தோஷம் இருப்பதைக் குறிக்கிறது.
இவ்வாறு கெட்ட கனவுகள் வந்தால் நாம் பயம் கொள்வோம். அவ்வாறு மனம் பதட்டம் அடையாமல் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் நமக்கு வரும் ஆபத்துகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |