உங்கள் ஜாதகத்தில் கேது எங்கு இருக்கிறார்? வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு மனிதனுக்கு தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கிறார். மேலும், ஜாதகத்தில் இவர் எந்த கட்டத்தில் அமைர்ந்து இருக்கிறாரோ, அதற்கு ஏற்ப அந்த ஜாதகரின் வாழ்க்கை நிலையே மாறுகிறது.
அதோடு, கேது ஒருவர் ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருக்கும் பொழுது அந்த ஜாதகருக்கு மிக சிறந்த யோகமும் அதிர்ஷடமும் கிடைக்கிறது என்கிறார்கள். ஆனால், இந்த கேதுவானது மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் இருப்பது நன்மையை தரும்.
காரணம், இவர் பிற கிரகங்களோடு இணைந்து இருக்கும் பொழுது அந்த கிரகத்தின் பலனை இவர் குறைத்து ஜாதகரால் அந்த பலனை அனுபவிக்க முடியாமல் செய்து விடுகிறார். அப்படியாக, கேது பகவான் 12 கட்டத்தில் எங்கு அமர்ந்து இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
1. கேது முதல் வீட்டில் இருக்கும் பொழுது அந்த ஜாதகர் முக ராசி கொண்டவராக உள்ளார். இவர் மிகவும் திறமை வாய்ந்த நபராக இருப்பார். இவர்களுக்கு இயற்கையாவே ஞானம் அதிகம் இருக்கும். இருந்தாலும் ஜாதகர் எதன் மீதும் அதீத பற்று இல்லாமல் வாழ்வார்.
2. கேது இரண்டாம் வீட்டில் இருக்கும் பொழுது ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பற்றுவதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார். இருப்பினும் அதிகம் கோபம் கொள்பவராக இருப்பார். பிற மதத்தினருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
3. கேது மூன்றாம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரரால் இவருக்கு எப்பொழுதும் ஆதாயம் இல்லை. எதையும் தீர யோசித்து முடிவு செய்வதில் அதிகம் குழப்பம் கொள்வார். துணிச்சல் இவர்களுக்கு குறைந்தே காணப்படும்.
4. கேது நான்காம் வீட்டில் இருக்கும் பொழுது சிறு வயதிலே வாழ்க்கையின் மீது ஒரு வித விரக்தி ஏற்பட்டு விடும். இவர்கள் எதையும் கடினமாக உழைத்த பிறகே அவர்களால் அதை அடைய முடியும். நல்ல தொழிலில் அமர்வார்கள்.
5. கேது ஐந்தாம் வீட்டில் இருக்கும் பொழுது சொந்த ஊரில் அமர்வதில் சில சிக்கல் உண்டாகும். யாரையும் எளிதாக நம்பமாட்டார்கள். அதிகம் ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
6. கேது ஆறாம் வீட்டில் இருக்கும் பொழுது இவர்களுக்கு எதிரி தொல்லைகள் இருக்காது. மீறி இவர்களை எதிர்ப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். இவர்களுக்கு விரும்பிய விஷயங்கள் விரும்பிய நேரத்தில் கிடைக்கும்.
7. கேது ஏழாம் வீட்டில் அமரும் பொழுது திருமணத்தில் சிக்கல் மற்றும் கால தாமதம் கொண்ட திருமணம் நடக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
8. கேது எட்டாம் வீட்டில் இருக்கும் பொழுது இவர்களிடம் நம்பி எந்த ஒரு விஷயத்தையும் நாம் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், இவர்கள் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்த நபராக இருப்பார்கள்.
9. கேது ஒன்பதாம் வீட்டில் இருக்கும் பொழுது தந்தையின் ஆதரவு இல்லாமல் இருக்கும். பூர்வீக சொத்துக்களை அனுபவிப்பதில் சில சிக்கல் உண்டாகும். உறவுகளால் சில சங்கடம் உருவாகும்.
10. கேது பத்தாம் வீட்டில் இருக்கும் பொழுது வேலைக்கு செல்வதில் சிக்கல் உண்டாகும். வேலையில் கடின உழைப்பை போட்டால் பெரிய இடத்திற்கு செல்லலாம்.
11. கேது பதினொன்றாம் வீட்டில் இருக்கும் பொழுது தொழிலில் எதிர்பாராத நேரத்தில் திடீர் லாபங்கள் கிடைக்கும். மிக பெரிய செல்வந்தராக இருப்பார்கள். சிலருக்கு தேவை இல்லாத நட்புகளின் அறிமுகம் கிடைக்கும்.
12. கேது பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் பொழுது இவர்களுக்கு எதை பற்றியும் கவலையும் சிந்தனையும் இருக்காது. எப்பொழுதும் சோகமாக காணப்படுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |