நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய வழிபாட்டு சூட்சுமங்கள்
நாம் ஒவ்வொரு கோயில்களுக்கு செல்வதற்கு முன்னால் அந்த கோயில்களில் உள்ள சில முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்டு அந்த வேளையில் சென்று சுவாமி தரிசனம் செய்தால் நாம் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
அப்படியாக, நாம் சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு முன்னால் தெரிந்துக்கொள்ள வேண்டிய சூட்சுமங்கள் பற்றிப் பார்ப்போம்.
நாம் சமயபுரம் மாரியம்மனை சென்று வழிபாடு செய்யவேண்டும் என்றால் மதியம் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை உள்ள நேரத்தில் சென்று வழிபாடு செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கும். அதாவது சமயபுரம் மாரியம்மன் நகர் வலம் முடித்து தன் சிம்மாசனத்தில் அமரும் நேரமே மாலை மூன்று மணி.
இந்த நேரத்தில் அம்மனை தரிசிப்பது நன்மை தரும். அதே போல் மாங்காடு அம்மனை தரிசனம் செய்ய உகந்த நேரமாக மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ளது. அம்மன் மதியம் கடும் வெயிலில் கடும் தவம் இருப்பதாக ஐதீகம்.
அதனால் அம்மனை தவக்கோலத்தில் தரிசிப்பதால் நம்முடைய கடும் வினைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
மாயவரம் அயபாம்பிகையை அங்க பிரதட்சிணம் செய்து வழிபடுதல் நலம். இங்கு சென்று தெப்பக் குளத்தில் குளித்து விட்டு அங்க பிரதட்சிணம் செய்தால் நமக்கு ஏற்பட்ட எப்பேர்ப்பட்ட கஷ்டமும் தடைகளும் விலகும்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் ஆண்கள் கிரிவல பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே 50 அடி வரை ஆண்கள் அங்க பிரதட்சிணம் செய்யலாம். ஆனால், பெண்கள் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சிணத்தை தவிர்த்து, அண்ணாமலையார் கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |