திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இன்று காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோலாகலமாக நடைபெறும்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 8ஆம் திகதி நடைபெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |