குலதெய்வத்தின் முழு அருளை பெற இப்படி விளக்கேற்றுங்கள்
பணம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும்.
வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.
தினமும் வீட்டில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.
இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றினால் கணவன், மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.
வேப்பெண்ணை, இலுப்ப எண்ணை, நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.
நெய், விளக்கெண்ணை, இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும்.
அதுமட்டுமல்ல தீபச்சுடரில் இருந்து வெளியாகும் சக்தி ஆக்சிஜனை அதிகரித்து தரும். இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |