உங்களுடைய வீட்டில் இந்த கெட்ட அறிகுறிகள் இருக்கிறதா? என்ன காரணம் தெரியுமா?
வீடுகளில் இறந்து போன முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் செய்ய தவறும் பொழுது பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
சின்னச் சின்ன விஷயங்கள் கூட நம்மை பெரிய அளவில் உயர்த்தும். ஆனால், அந்த சின்னச் சின்ன விஷயங்களை செய்ய மறந்து விட்டால் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டு, பெரிய இழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்து மதத்தின்படி, பித்ரு பக்ஷ நேரத்தில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களுடைய சந்ததியினரை ஆசீர்வதிப்பார்கள் என கூறப்படுகிறது.
பித்ரு பக்ஷத்தில் முன்னோர்களும் முறையாக அனுஷ்டிக்கப்படுகிறார்கள். இது போன்ற நாட்களில் அன்னதானம், பிண்டம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில், எமது முன்னோர்கள் கோபமாக இருந்தால் என்னென்ன பாதிப்புக்கள் வரும் என்பதற்கு ஜோதிடர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. வீட்டில் சண்டை, சச்சரவுகள், பிரிவினைகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற விடயங்களுக்கு சண்டைகள் ஏற்படும். இது பித்ரு தோஷம் என்பதால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
2. சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த வேலையை செய்ய முடியாது.
3. உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்றால் உங்களின் குழந்தைகள் கூட பேச்சை கேட்க விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு சரியான சடங்குகளை செய்ய வேண்டும்.
4. குடும்பத்தில் திருமண பிரச்சனைகள் அதிகமாக வந்தால், இதுவும் பித்ரு தோஷத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
5. சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது திடீரென நஷ்டம் ஏற்பட்டால் அதவும் தோஷமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று அடிக்கடி வீட்டிலுள்ளவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |