சனிக்கிழமையில் இந்த பொருளை மறந்தும் வாங்காதீங்க.. ஆபத்து பின் தொடரும்
இந்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்கள் பலன் தருகிறது என்பது நம்பிக்கை.
அதன்படி, ஏழு கிழமைகளில் எந்த காரியம் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய கணிப்பும் உள்ளது.
ஜோதிடம் ஜாதகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதனை கடைபிடித்தும் வருகிறார்கள். அப்படி சனிக்கிழமையன்று சில விடயங்கள் செய்தால் அது அன்றைய நாளுக்கு பலனாக அமையும் என கூறப்படுகிறது
. ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை தருகிறது. அதே சமயம் குறிப்பிட்ட சில பொருட்களை அன்றைய நாளில் வாங்க கூடாது என இருக்கும் பொழுது, மீறி வாங்கினால் அது எதிர்மறையான சக்திகளை ஈர்க்கும்.
அந்த வகையில் சனிக்கிழமையில் வாங்கக் கூடாத பொருட்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாங்கக்கூடாத பொருட்கள்
1. நீதிமான் சனிபகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்கள் வாங்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் வாங்கினால் தீமை. அதே சமயம் மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்கினால் கடன் பிரச்சினைகள் தீரும்.
2. சனிக்கிழமைகளில் எண்ணெய் வாங்கக்கூடாது என சாஸ்த்திரம் கூறுகிறது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். அதே சமயம், எண்ணெய் மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் வாங்கக் கூடாது.
3. உப்பு வாங்குவதற்கு எப்பொழுதும் சனிக்கிழமை சரியான நாளாக இருக்காது. வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும். தொழில், வியாபாரம் இரண்டையும் செய்பவர்கள் இதனால் நஷ்டங்களை சந்திப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |