அமானுஷ்ய சிக்கல்களைத் தீர்க்கும் ஆகாச மகா முனீஸ்வரர் ஆலயம்
மனிதனாக பிறந்தால் கட்டாயம் நம் முன் ஜென்ம வினைகளாலும், ஜாதகத்தில் உண்டாகும் கிரக மாற்றங்களாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அவ்வாறு நாம் சந்திக்கும் துன்பங்களில் இருந்து விடுபட நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இறைவழிபாடு மட்டுமே.
அவ்வாறு வாழ்க்கையில் எதற்கு தான் துன்பம் அனுபவிக்கின்றேன் என்று தெரியாமல் அமானுஷ்ய சிக்கலில் மாட்டி தவிப்பவர்கள் ஒருமுறை ஆகாச மகா முனீஸ்வரரை வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
அதாவது, பிறந்ததில் இருந்து தான் வாழ்க்கையில் நிம்மதியே சந்தித்து இல்லை என்று சலித்து வாழ்பவர்கள் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து இறைவழிபாடு செய்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களை சந்தித்து வருகின்றார்கள்.
சிவபெருமானின் முதன்மைப் காவலர்களில் மிகவும் முக்கியமானவர் இந்த முனீஸ்வரர். இவருக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இலங்கை என்று கடல் கடந்த நாடுகளிலும் கோயில் உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பார்க்கப்படுகிறார்.
அதாவது துன்பம் என்று உருகி வேண்டினால் முனீஸ்வரர் வெகு விரைவில் நம்முடைய துன்பங்களை போக்கி வாழ்வில் நிம்மதியை அருள்கிறார். அப்படியாக, இந்த ஆகாச மகா முனீஸ்வரர் ஆலயம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சதுரகிரி செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.
தங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் விலக வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்வது நல்ல பலனைக்கொடுக்கும். அவ்வாறு வழிபாடு செய்ய செல்லும் பொழுது ஜவ்வாது சுருட்டு பாக்கெட் மற்றும் மது வர்க்கம் ஒன்றை கொண்டு வர வேண்டும்.
பின்பு அதை முனீஸ்வரர் பாதத்தில் வைத்து குறைந்தது 30 நிமிடங்கள் பிரார்த்தனை செய்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 வாரங்கள் வழிபாடு செய்து வர வெகு விரைவில் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை காணலாம்.
தீர்க்க முடியாத பிரச்சன்னைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயம் வருவது நல்ல தீர்வை வழங்கும். மேலும், பக்தர்கள் அசைவ சமையல் செய்து முனீஸ்வரருக்கு படையலிட்டு அங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் முனீஸ்ரவர் மனம் குளிர்ந்து நம் குடும்பத்தை காத்தருள்கிறார்.
குறிப்பாக, கணவன் மனைவி இடையே பிரிவு, கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை ஜாதகத்தில் தடை உள்ளவர்கள் கட்டாயம் இங்கு வந்து வழிபாடு செய்வது அவர்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |