பணம் சேர சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்

By Sakthi Raj May 12, 2024 05:00 AM GMT
Report

ஒரு மனிதன் வாழ்வதற்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒரு மனிதன் உயிருடன் வாழும் காலத்தில் இந்த உலகத்தில் பணம் அவனுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.

பகவான் கிருஷ்ணரே என்ன சொல்கிறார் என்றால் தனக்கு பிடித்த மூன்று மனிதர்களில் மூன்றாவது மனிதராக எவன் ஒருவன் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்கின்றானோ அவனை தனக்கு பிடிக்கும் என்று சொல்கிறார்.

பணம் சேர சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம் | Mahalakhsmi God Rama Namam Manthiram Palangal

அதாவது இந்த பூ உலகத்தில் ஒருவன் வாழ்வதற்கு பணம் எவ்வளவு அவசியம் அதை அவன் கேட்கும் பொழுது பெருமாளுக்கு பிடித்த மனிதன் ஆகின்றான்.அதாவது ஒரு மனிதன் தனக்கான தேவையை சரியாக புரிந்து கொண்டு,அதன்படி வாழ்தல் வேண்டும் என்று பெருமாளுக்கு பிடித்த அந்த மூன்றாவது மனிதன் உணர்த்தும் படமாகிறது.

அப்படி இருக்க ஒருவருக்கு பணம் இல்லை என்றால் அனைத்து சோகங்களும் கஷ்டங்களும் அவன்  வந்துவிடும்.அப்படியாக பணம் ஒருவரது வாழ்வில் அத்தனை முக்கியமானதாக இருக்கிறது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (12/05/2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (12/05/2024)


சிலருக்கு எத்தனை சம்பாதித்தாலும் பணம் அவர்கள் வீட்டில் தங்குவதில்லை அல்லது வந்த பணம் எப்படி போகின்றது என்று தெரியாத அளவுக்கு செலவுகள் வந்து கொண்டே இருக்கும் .

வந்த பணமும் வருகின்ற பணமும் நம் வீட்டில் தங்குவதற்கும் பணகஷ்டங்கள் நீங்குவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் நம் இறைவழிபாடு அவசியம். அப்படி இருக்க நாம் பணம் சேருவதற்கான கீழ்கண்ட மஹாலட்சுமி மந்திரம் சொல்லி வர நம் கஷ்டங்கள் தீரும் 

பணம் சேர சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம் | Mahalakhsmi God Rama Namam Manthiram Palangal

பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US