12 ராசிகளின் செவ்வாய் பகவான் எங்கு அமர்ந்திருக்கிறார்? அதற்கான பலன் இதோ
ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒருவருடைய வாழ்க்கையில் வேகம், விவேகம் மற்றும் பெண்களாக இருந்தால் கணவன் மற்றும் சகோதரரை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார்.
அந்த வகையில், செவ்வாய் பகவான் எந்த கட்டத்தில் அமர்கிறாரோ அதனைப் பொறுத்து பலன் மாறுகிறது. அப்படியாக, செவ்வாய் பகவான் இந்த கட்டத்தில் அமர்ந்திருக்கிறாரோ அதற்குரிய பலன் என்ன என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்களுக்கு திருமண மற்றும் உறவு சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும்.
ரிஷபம்:
இவர்களுக்கு மருத்துவ கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் சிறப்பாக வந்து சேரும்.
மிதுனம்:
எதிர்பாராத சொத்து அல்லது வாரிசு சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உண்டு.
கடகம்:
தகவல் தொடர்பு மற்றும் தரகு தொழில் இவர்கள் சாதகமாக அமையும்.
சிம்மம்:
தொழில் ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்கத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி:
அரசு வேலைக்கான வாய்ப்புகள் மிகவும் தாதுரியமாக அமையும்.
துலாம்:
மருத்துவம் அல்லது சட்ட துறையில் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
விருச்சிகம்:
கடன் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களில் ஜாமீன் கையெழுத்து போடுவதை இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தனுசு:
கல்வி மற்றும் தந்தையின் சொத்துக்களை நிர்வகிப்பதில் சில சவால்களை இவர்கள் சந்திக்கலாம்.
மகரம்:
கடின உழைப்பு மற்றும் தனிப்பட்ட முயற்சியால் இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:
சொத்து ஆவணங்களை மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டு.
மீனம்:
ஆவணங்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பான சிக்கல்கள் வரலாம் கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |