மேஷத்தில் புதன் பெயர்ச்சி : நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!
ஜோதிட ரீதியில் கிரங்களின் பெயர்ச்சி மற்றும் ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவதால் ஏற்படும் அரிய யோகங்கள் என்பவற்றின் தாக்கமானது ராசி பலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் இளவரசனாகவும், படிப்பு புத்தி கூர்மை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி தாராராகவும் அறியப்படும் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வரும் நிலையில், நாளை ஏப்ரல் 30 ஆம் திகதி மேஷ ராசிக்குள் நுழைகின்றார்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளவான சாதக பலன்களை பெறப்போகும் முக்கிய 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு குறித்த புதன் பெயர்ச்சி இடம்பெறவுள்ளதால், இவர்களின் தொழில் வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகப்போகின்றது.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு நிதி நிலையில் அமோக வளர்ச்சி உண்டாகும். புதிய வழிகளில் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன பெயர்ச்சி நிகழ்வதால், பொருளாதாரத்தில் எதிர்ப்பார்த்ததை விட அதிக ஏற்றம் உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.
வெளிநாட்டு செல்வதற்கான யோகம் உண்டாகும். இவர்கள் நினைத்த காரியத்தை குறைந்த உழைப்பியே நிவேற்றுவதற்கான யோகம் உண்டாகும்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீ்ட்டில் குறித்த புதன் பெயர்ச்சி நடைபெறுவதால் இவர்களின் தொழில் வாழ்ககையில், அமோக முன்னேற்றம் இருக்கும்.
புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கான யோகம் கைகூடி வரும். குறிப்பாக நிதி நிலையில் அசுர வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் பெயர்ச்சி இடம்பெருவதால், திருமண வாழ்க்கையில் நீண்ட காலம் பிரச்சினைகளையும் மன கசப்புகளையும் சந்தித்தவர்களின் வாழ்வில் மகிழச்சியான சூழல் உருவாகும்.
இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி மோக முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.