குழந்தை வரம் தரும் திருப்புகழ்

Report

முருகன் அவனை நினைத்து வேண்டிய காரியம் எதுவும் நடந்திடாமல் போனதாக சரித்திரம் இல்லை. அப்படியாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்கள் செல்வர்.

அவர்கள் எத்தனையோ மருத்துவ முயற்சிகள் எடுத்தும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாவதை நாம் பார்த்திருப்போம்.

குழந்தை வரம் தரும் திருப்புகழ் | Murugan Tirupugazh Kulanthaivaram

அவர்கள் அனைவரும் இந்த திருப்புகழை சொல்ல முருகன் குழந்தை வரம் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது 

ஜெகமாயை யுற்ற என் அகவாழ்வில்வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாயளித்த பொருளாகி
மகவாவினுச்சி விழியாறறத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேண்டும்
முகமாயமிட்ட குறமாதினுக்கு
முலைமேலணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியே யுரைத்த குருநாதா
தகையாதெனக்கு உன் அடிக்காண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரி சத்தில்
சமர் வேலெடுத்த பெருமானே” 

 இந்த திருப்புகழ் தினம் படிக்க முருகனே நம் வீட்டில் குழந்தையாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US