குழந்தை வரம் தரும் திருப்புகழ்
முருகன் அவனை நினைத்து வேண்டிய காரியம் எதுவும் நடந்திடாமல் போனதாக சரித்திரம் இல்லை. அப்படியாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்கள் செல்வர்.
அவர்கள் எத்தனையோ மருத்துவ முயற்சிகள் எடுத்தும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாவதை நாம் பார்த்திருப்போம்.
அவர்கள் அனைவரும் இந்த திருப்புகழை சொல்ல முருகன் குழந்தை வரம் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது
ஜெகமாயை யுற்ற என் அகவாழ்வில்வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாயளித்த பொருளாகி
மகவாவினுச்சி விழியாறறத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேண்டும்
முகமாயமிட்ட குறமாதினுக்கு
முலைமேலணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியே யுரைத்த குருநாதா
தகையாதெனக்கு உன் அடிக்காண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரி சத்தில்
சமர் வேலெடுத்த பெருமானே”
இந்த திருப்புகழ் தினம் படிக்க முருகனே நம் வீட்டில் குழந்தையாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |