முருகப்பெருமானின் முக்கியமான 10 திருப்புகழ்- படிப்பவர் வாழ்வில் துன்பம் இல்லை
நாம் ஒருபொழுதும் இறைவழிபாட்டையும், இறைவனின் திருநாமங்களையும் மந்திரங்களையும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இந்த உலகத்தில் இறுதி நொடியில் ஒரு மாற்றமும் அதிசயமும் நிகழ வேண்டும் என்றால் கட்டாயம் இறை அருள் இருந்தால் மட்டுமே முடியும்.
அப்படியாக, வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும் அதில் பலருக்கும் தடைகளும் தடங்கலும் வருவதை நாம் பார்க்கமுடியும். அவர்கள் அதை தகர்த்து முன்னேற்றம் அடைய இறைவனை சரண் அடைவது மட்டுமே நல்ல வழி.
அந்த வகையில் அன்பும், வீரமும், ஞானமும் நிறைந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமான் அவரை வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் தடைகளை தாண்டி வெற்றிகள் கிடைக்கிறது. அதிலும் முருகப்பெருமானின் திருப்புகழை தினமும் பாராயணம் செய்து வழிபாடு செய்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் முருகன் அருளால் நடக்கும்.
அப்படியாக, முருகப்பெருமானின் முக்கியமான 10 திருப்புகழ் பற்றியும் அதன் பலன்களும் பற்றியும் பார்ப்போம்.
1) குழந்தை வரம் பெற:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பமுடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்,
திரமாயளித்த பொருளாகி,
மகவாவி னுச்சி விழியாந நத்தில்,
மலைநேர்பு யத்தி லுறவாடி,
மடிமீத டுத்து விளையாடி நித்த,
மணிவாயின் முத்தி தரவேணும்,
முகமாய மிட்ட குறமாதி னுக்கு,
முலைமேல ணைக்க வருநீதா,
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்,
மொழியேயு ரைத்த குருநாதா,
தகையாதெ னக்கு னடிகாண வைத்த,
தனியேர கத்தின் முருகோனே,
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்,
சமர்வேலெ டுத்த பெருமாளே.
2) திருமண வரன் கூட:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே,
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே,
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்,
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே,
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே,
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா,
நாலந்த வேதத்தின் பொருளோனே,
நானென்று மார்தட்டும் பெருமாளே.
3) கல்வியில் தேர்ச்சி:
மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப்,
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே,
நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்,
கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே.
4) சொந்த வீடு அமைய:
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற,
அண்டர்மன மகிழ்மீற வருளாலே,
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர,
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக,
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு,
மஞ்சினனு மயனாரு மெதிர்காண,
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற,
மைந்துமயி லுடனாடி வரவேணும்,
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள,
புந்திநிறை யறிவாள வுயர்தோளா,
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு,
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா,
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப,
தண்டமிழின் மிகுநேய முருகேசா,
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான,
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
5) தீராத நோய் தீர:
இருமலு ரோக முயலகன் வாத,
மெரிகுண நாசி விடமேநீ,
ரிழிவுவி டாத தலைவலி சோகை,
யெழுகள மாலை யிவையோடே,
பெருவயி றீளை யெரிகுலை சூலை,
பெருவலி வேறு முளநோய்கள்,
பிறவிகள் தோறு மெனைநலி யாத,
படியுன தாள்கள் அருள்வாயே,
வருமொரு கோடி யசுரர்ப தாதி,
மடியஅ நேக இசைபாடி,
வருமொரு கால வயிரவ ராட,
வடிசுடர் வேலை விடுவோனே,
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி,
தருதிரு மாதின் மணவாளா,
சலமிடை பூவி னடுவினில் வீறு,
தணிமலை மேவு பெருமாளே.
6) நினைத்தது நடக்க :
நினைத்த தெத்தனையிற் றவறாமல்,
நிலைத்த புத்திதனைப் பிரியாமற்,
கனத்த தத்துவமுற் றழியாமற்,
கதித்த நித்தியசித் தருள்வாயே,
மனித்தர் பத்தர்தமக் கெளியோனே,
மதித்த முத்தமிழிற் பெரியோனே,
செனித்த புத்திரரிற் சிறியோனே,
திருத்த ணிப்பதியிற் பெருமாளே.
7) வருமானம் பெருக:
பெருக்கச்சஞ் சலித்துக்கந்,
தலுற்றுப்புந் தியற்றுப்பின்,
பிழைப்பற்றுங் குறைப்புற்றும்
பொதுமாதர், ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்,
கலைக்குட்டங் கிடப்பட்சம்,
பிணித்துத்தந் தனத்தைத்தந் தணையாதே,
புரக்கைக்குன் பதத்தைத்தந்,
தெனக்குத்தொண் டுறப்பற்றும்,
புலத்துக்கண் செழிக்கச்செந் தமிழ்பாடும்,
புலப்பட்டங் கொடுத்தற்கும்,
கருத்திற்கண் படக்கிட்டும்,
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே,
தருக்கிக்கண் களிக்கத்தெண்,
டனிட்டுத்தண் புனத்திற்செங்,
குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே,
சலிப்புற்றங் குரத்திற்சம்,
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்,
சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியசூரன்,
சிரத்தைச்சென் றறுத்துப்பந்,
தடித்துத்திண் குவட்டைக்கண்,
டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே,
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்,
திருச்சிற்றம் பலத்தத்தன்,
செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே.
8) நல்ல வேலை கிடைக்க :
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து,
ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி,
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து,
ஆண்டுபல சென்று கிடையோடே,
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து.
ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்.
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து,
ஊன்றிய பதங்கள் தருவாயே,
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த,
வேந்திழையி னின்ப மணவாளா,
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச,
வேண்டிய பதங்கள் புரிவோனே,
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து,
மாண்புநெல் விளைந்த வளநாடா,
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை யமர்ந்த பெருமாளே.
9)கணவன் மனைவி ஒற்றுமை :
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட லொன்றினாலே,
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு திங்களாலே,
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ரங்களாலே,
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ழங்கலாமோ,
தனைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா,
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் கந்தவேளே,
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய மங்கைபாகா,
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
10) எதிரிகள் தொல்லை விலக:
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர,
தவிக்குங்கொடி மதனேவிற்,
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு,
தமிழ்த்தென்றலி னுடனேநின்,
றெரிக்கும்பிறை யெனப்புண்படு,
மெனப்புன்கவி சிலபாடி,
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை,
யுரைத்துய்ந்திட அறியாரே,
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர,
மனுக்குந்தெரி வரிதான,
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு,
மரற்கும்புரி தவபாரக்,
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை,
வரிக்குங்குரு பரவாழ்வே,
கிளைக்குந்திற லரக்கன்கிளை,
கெடக்கன்றிய பெருமாளே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |