இனிமேல் உங்கள் குழந்தை இந்த விஷயங்களை சொன்னால் அதைக் கேட்க மறுக்காதீர்கள்
ஒரு நன்றாக கவனித்து இருந்தால், கீழ்க்காணும் விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடியும். அதாவது நாம் செய்யக்கூடிய காரியங்களுக்கு குழந்தைகள் சரி வேண்டாம் என்கின்ற ஒரு அசைவுகளை அவர்களுக்கே தெரியாமல் கொடுப்பது உண்டு.
குழந்தை நாம் வெளியே கிளம்புகின்ற வேளையில் செல்லவே வேண்டாம் என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் அவர்களை விட்டு வேலைக்கு கிளம்பும் பொழுது செய்வது உண்டு என்றாலும், அந்த ஒரு நாள் விசித்திரமாக இருக்கும்.

அதையும் மீறி அவர்கள் வெளியே சென்று வருகின்ற பொழுது ஏதேனும் தடங்களையும் தாமதங்களையும் சந்தித்திருப்பார். இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கலியுக நியதியாகவே மூன்று வயது வரை குழந்தைகளுக்கு தேவதைகளுடைய காட்சிகள் கிடைக்கிறது.
அந்த காரணத்தினால் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடைய எதிர்காலத்தை உணரக்கூடியவர்களாகவும், அவ்வப்போது நடக்க இருக்கக்கூடிய சம்பவங்களை தங்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கக் கூடியவர்களாகவும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களை காப்பதற்கு முயல் பவர்களாகவும் செயல்படுகிறார்கள்.

ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் குழந்தைகளுடைய செய்கைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஆனால், உண்மையாகவே அந்த குழந்தைகள் நம்முடைய எதிர்காலத்தை கணித்து நடப்பவற்றிலிருந்து நம்மை காக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் நிச்சயம் நல்ல மாற்றம் பிறக்கும்.
இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறினார்கள். ஆக, முடிந்தவரை குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் என்றால் அதனை கவனிக்க தவறாதீர்கள். அதில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |