இழந்த சொத்தை மீட்க "நிர்ஜலா ஏகாதசி" விரதம்
நிலம் பொருள் இவை எல்லாம் நாம் உழைத்து சம்பாதித்து வாங்க,போலியாக நில ஆவணம் போட்டு ஏமாற்றுகின்றனர்.
இல்லை சொந்தங்களே நம்மை ஏமாற்றுவார்கள்.இல்லை ஆசையாக நிறைய காசு கொடுத்து வாங்கிய பொருள் தொலைந்து போகும் இல்லை திருட்டு போவிடும்.
இழந்த அனைத்தயும் மீட்டு எடுக்க என்னதான் கோர்ட் சட்டம் என்று அலைந்தாலும் இறைவன் அவன் பார்வை நம் மீது இருக்க வேண்டும்.அவன் அருளால் இழந்த அனைத்தையும் கைவசம் பற்றலாம்.
அப்படியாக இழந்த சொத்தை மீட்க ஆனிமாதம் வரும் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "நிர்ஜலா ஏகாதசி" என்று பெயர்.
அதாவது வியாசரின் வழிகாட்டுதலில் பாண்டவர்களில் ஒருவரான பீமன் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்ததால் இப்பெயர் வந்தது.
நிர்ஜலா என்பதற்கு தண்ணீர் இல்லாமல் எனப்பொருள், இந்நாளில் விளக்கேற்றி பெருமாளுக்கு துளசி மாலை சாத்த வேண்டும்.இதை பீம ஏகாதசி எனவும் சொல்லுவார்கள்.
அதாவது இந்த விரதம் மேற்கொண்டு தான் பாண்டவர்கள் இழந்த நாட்டை மீட்டனர்.ஆதலால் இழந்த சொத்துக்கள் .
கை விட்டு போன பொருள் கிடைக்க இந்நாளில் விரதம் இருக்க நாம் இழந்ததை மீட்கலாம் என நம்பிக்கையாக இருந்து வருகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |