வீட்டில் நேரம் சரி இல்லையா? இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும்
சிலர் வீடுகளில் திடீர் என்று எல்லாம் எதிர்மறையாக நடக்கும் நிலையை பார்க்கமுடியும். அவ்வாறான வேளையில் அவர்களை அறியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். அப்பொழுது, அந்த இக்கட்டான நிலையை கடக்க அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி இறைவழிபாடு தான்.
அப்படியாக, வீட்டில் நேரம் சரி இல்லாத சுழலில் அம்பாள் கோயிலுக்கு சென்று இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். அவர்கள் வீட்டில் உடனடியாக நடக்கும் மாற்றங்களை நாம் காணலாம். அதாவது கெட்ட நேரம் சூழ்ந்து விட்டால் அந்த குடும்பத்தில் நடப்பவை எல்லாம் மோசமானவையாகத்தான் இருக்கும்.
குடும்பத்தில் சிலருக்கு திடீர் உடல் உபாதைகள், பொருளாதர இழப்புகள், அவமானம், சிக்கல்கள் என்று எல்லாம் கண்ணிமைக்கும் முன் நடந்து இருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் இருந்து நாம் வெளியே வர செய்யவேண்டிய ஒரே வழிபாடு அதர்வண பெண் தெய்வ வழிபாடு ஆகும்.
உக்கிரமான அம்மன் வழிபாட்டை தான் அதர்வண தெய்வ வழிபாடு என்று சொல்லுவார்கள். அப்படியாக, நம் வீட்டில் அருகில் இருக்கும் பத்திரகாளி கோவில், பிரத்தியங்கிரா தேவி கோவில், வாராகி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி, இப்படி எந்த கோவில் இருந்தாலும் சரி அந்த கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் செய்யவேண்டும். அதாவது வெள்ளி செவ்வாய் கிழமையில் எலுமிச்சம் பழம் மாலையை உங்கள் கையாலேயே கோர்த்து அதர்வண தெய்வத்திற்கு மாலை போட வேண்டும்.
இந்த வழிபாட்டை கட்டாயம் குடும்பங்களுடன் சேர்ந்து சென்று தான் தரிசனம் செய்ய வேண்டும். இந்த மாலையை அம்மனுக்கு சாத்திவிட்டு குருக்களிடம் மாலையை மறுநாள் நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட வேண்டும்.
மறுநாள் சென்று அம்மனுக்கு சாத்திய அந்த எலுமிச்சை மாலையை வீட்டிற்கு எடுத்து வந்துபூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை வேண்டி மனதார பிரார்த்தனை செய்து, அந்த மாலையை நிலை வாசல் கட்டி விட வேண்டும்.
இவ்வளவுதான் வழிபாடு. மேலும், அந்த எலுமிச்சம் பழம் மாலை நாட்கள் போக போக காயத் தொடங்கும். அவ்வாறு நன்றாக காய்ந்த பிறகு எலுமிச்சம் பழமாலையை எடுத்து கால் படாத இடத்தில், ஒதுக்கு புறமாக வைத்து விட வேண்டும்.
ஏழு நாட்கள் வரை அந்த மாலை நிலை வாசல் படியிலேயே இருக்கலாம். ஒருவேளை போட்ட உடனே எலுமிச்சம் பழங்கள், அழுகத் தொடங்கி விட்டால், அந்த மாலையை உடனடியாக கழட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.
இவ்வாறு செய்து வர வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி விரைவில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |