புண்ணியம் இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலில் இவரை தரிசிக்க முடியும்

By Sakthi Raj May 30, 2025 05:35 AM GMT
Report

 தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு பலரும் அறிந்திடாத ஒரு முக்கியமான சிறப்பு இக்கோயிலில் அமைந்து உள்ளது. அதை பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது நேராக அம்மனையும் சொக்கநாதரையும் மட்டுமே தரிசனம் செய்து வந்து விடுவோம். ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலில் அமையப்பெறாத சன்னதிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இது பலருக்கும் தெரிவதில்லை அவ்வளவு தான். அப்படியாக, அங்கு கோயிலை சுற்றி வெளிப்புற பாதையில் பல அற்புத விஷயங்கள் மறைந்து உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் பலரும் அறிந்திடாத பாதாள குபேர பைரவர் சன்னதி. 

புண்ணியம் இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலில் இவரை தரிசிக்க முடியும் | Pathala Kubera Bairavar In Meenatchi Amman Temple

மேலும், இந்த சன்னதி தினமும் ஒரு மணி நேரம் ராகு காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். அதாவது, ராகு காலம் துவங்கும் போது திறந்து, ராகு காலம் நிறைவடைவதற்குள் சன்னதி சாத்தப்பட்டு விடும்.

இந்த பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த பைரவராக வழிபாடு செய்யப்படுகிறார். அதாவது ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், பில்லி சூனியம் போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இந்த பைரவரை வழிபாடு செய்ய அவை எல்லாம் விலகி மகிழ்ச்சியாக வாழ்வதாக சொல்லப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் வக்கிர நிலை- பணமழையால் மகிழ்ச்சி யாருக்கு?

30 ஆண்டுகளுக்கு பின் சனியின் வக்கிர நிலை- பணமழையால் மகிழ்ச்சி யாருக்கு?

அதோடு இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வது தான் மிக சிறந்த பலனை கொடுக்கும். மேலும், இவரை வழிபாடு செய்யும் பொழுது புனுகு, எலுமிச்சை, செவ்வரளி வாங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்தால் செவ்வரளியை பைரவருக்கு சாத்தி விட்டு, எலுமிச்சை, புனுகை சுவாமியிடம் வைத்து நமக்கு தருவார்கள். 

புண்ணியம் இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலில் இவரை தரிசிக்க முடியும் | Pathala Kubera Bairavar In Meenatchi Amman Temple

பிறகு அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய கர்ம வினைகள் யாவும் விலகி வாழ்க்கையே மாறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவரை தரிசனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

காரணம், இந்த சன்னதி கோவிலின் வடக்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் பாதைகள் சந்திக்கும் வாயு மூலையில் கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்து உள்ளது. கோவிலை சுற்றி போடப்பட்டுள்ள கம்பிகளுக்கு வெளியில், சாலையில் இருந்து மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.

மேலும், நமக்கு நேரம் நன்றாக உள்ளது என்றால் கட்டாயம் இவரின் தரிசனம் கிடைத்து விடும். ஆதலால், இனி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பொழுது மறக்காமல் இந்த பைரவரை தரிசனம் செய்து வாருங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை பெறுங்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US