வாஸ்து: வீட்டில் பணம் நிரம்பி வழிய மயிலிறகை இந்த திசையில் வையுங்கள்
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான மயில் இறகுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மயில் தோகை வைத்து சில காரியங்களை செய்வதால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அந்தவகையில், வீட்டில் பணம் உள்ள இடத்திலோ மயில் தோகைகளை வைக்க வேண்டும். இது நிதி சிக்கலை தீர்க்கும்.
அதேபோல், மயில் தோகையில் கருப்பு நூலை கட்டி பணப்பையில் வைத்துக் கொண்டால், பணம் அதிகம் சேரும்.
கெட்ட கனவுகள் வந்தால், இரவில் படுக்கும் முன் தலையணையின் கீழ் மயில் இறகை வைத்தால் அதுபோன்ற கனவுகள் வராது.
வீட்டின் பிரதான வாயிலில் விநாயகர் சிலையுடன் மயில் இறகுகளை வைத்தால் பெரும் தோஷம் நீங்கி வீட்டிலுள்ள அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலும் விலகும்.
வீட்டில் உள்ள சிலைகள், பூஜை அறைகளை சுத்தம் செய்ய எப்போதும் மயில் தோகை பயன்படுத்துவது நல்லது.
இது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை அளிக்கும், வீட்டில் உள்ள கடன் பிரச்னைகளும் விலகும். தடைபட்ட வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும்.
மேலும், குழந்தைக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்றால், மயில் தோகை பாடப்புத்தகத்தில் வைத்தால், குழந்தையின் கல்வியில் ஆர்வம் ஏற்படலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |