நினைத்தது நடக்க தொடர்ந்து 6 பௌர்ணமியில் இந்த வழிபாட்டை செய்யுங்கள்

By Sakthi Raj Jun 15, 2025 10:42 AM GMT
Report

 இந்து மதத்தில் பௌர்ணமி தினம் ஆனது மிகவும் விஷேசம் நிறைந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. அதோடு அன்றைய தினம் தெய்வீக ஆற்றல் அதிக அளவில் காணப்படும் என்றும் அன்றைய தினம் நாம் வைக்கும் வேண்டுதல்களுக்கு மிக பெரிய பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியாக, வாழ்க்கையில் பல வருடங்களாக தீராத துன்பமும், கடனையும் சந்திக்கின்றவர்கள் தொடர்ந்து 6 பௌர்ணமி தினம் அன்று சந்திர தரிசனம் செய்து வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நடப்பதோடு, வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கின்றது என்று சொல்கிறார்கள். அதை பற்றிப்பார்ப்போம்.

நினைத்தது நடக்க தொடர்ந்து 6 பௌர்ணமியில் இந்த வழிபாட்டை செய்யுங்கள் | Pournami Vazhipadum Parigarangalum

ஜோதிடத்தில், சூரியன் சந்திரன் தான் மிக மிக முக்கியமான கிரகங்கள் ஆகும். அதாவது சூரியன் தந்தையையும் சந்திரன் தாயையும் குறிக்கும் கிரகங்கள்ஆகும். அப்படியாக, நாம் எப்படி பிற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கின்றமோ, அதே போல் சூரிய பகவானையும் சந்திர பகவானையும் நாம் வழிபாடு செய்யவேண்டும்.

இதில் பலரும் காலையில் சூரிய தரிசனம் செய்து வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். ஆனால், சந்திர தரிசனம் செய்வதை யாரும் அவ்வளவு பின்பற்றுவது இல்லை. ஆனால், நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் விலக கட்டாயம் சந்திர பகவான் வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைக் கொடுக்கும்.

இன்று முதல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 6 ராசிகள் - உங்கள் ராசி உள்ளதா?

இன்று முதல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 6 ராசிகள் - உங்கள் ராசி உள்ளதா?

 

அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினத்தன்று நாம் வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைக் கொடுக்கும். மனதில் தீராத குழப்பங்கள், கவலைகள், கொண்டு இருப்பவர்கள் அல்லது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக போராடி காத்திருப்பவர்கள் தொடர்ந்து 6 பௌர்ணமி அன்று அருகில் உள்ள சிவன் ஆலயம், அல்லது அம்மன் ஆலயம் சென்று அங்கு சந்திர பகவானை மனதார நினைத்து வேண்டுதல் வைக்க கட்டாயம் மனதில் தெளிவும் நினைத்த காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் விரைவில் நடக்கும்.

நினைத்தது நடக்க தொடர்ந்து 6 பௌர்ணமியில் இந்த வழிபாட்டை செய்யுங்கள் | Pournami Vazhipadum Parigarangalum

மேலும், எவர் ஒருவர் தொடர்ந்து 6 பௌர்ணமி தினம் அன்று சந்திர பகவானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு காட்டாயம் சந்திரன் அருளால் மனதில் உள்ள கோபம், குழப்பங்கள் விலகி தெளிந்த ஞானம் கிடைக்கும்.

குறிப்பாக திருமண தாமதத்தை சந்திப்பவர்கள் இந்த பௌர்ணமி வழிபாட்டை தொடர்ந்து 6 முறை செய்து வர கட்டாயம் விரைவில் அவர்கள் நினைத்தப்படி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

மேலும், கணவன் மனைவி இடையே சண்டைகள் என்று பிரிந்து வாழும் நிலை இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்கு இடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US