ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு- இந்த நாளில் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள்

By Sakthi Raj Jun 02, 2025 07:12 AM GMT
Report

 தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் முக்கியமான ஆலயங்களில் ராமேஸ்வரம் ஆலயம் ஒன்று. காசிக்கு நிகராக திகழும் இந்த ஆலயத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கும் புனித தீர்த்தங்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலிலும், கோவிலுக்கு உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி, ராமநாத சுவாமியை வழிபட்டாலும், எப்பேர்ப்பட்ட பாவங்களும் வாழ்க்கையில் உள்ள தடைகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும், இக்கோயில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அந்த வகையில் இக்கோயிலின் சிறப்புமிக்க வரலாற்றினை சித்தரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ராமர், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த தினத்தை ராமலிங்க பிரதிஷ்டை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு- இந்த நாளில் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள் | Rameshwaram Temple Is Closed On June 04 2025 News

அப்படியாக, இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை விழா ஜூன் 03ம் தேதி தொடங்கி ஜூன் 5ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைப்பெற உள்ளது. 

அதாவது, ஜூன் 03ம் தேதி அன்று கால பூஜை முடிந்த பிறகு மாலையில் ராவண சம்ஹாரமும், ஜூன் 04ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே அமைந்து உள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜூன் 05ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெற உள்ளது.

தவளைக்கு திருமணம் செய்து வைத்தால் உண்மையில் மழை வருமா?

தவளைக்கு திருமணம் செய்து வைத்தால் உண்மையில் மழை வருமா?

இதனை தொடர்ந்து ஜூன் 04ம் தேதியன்று அதிகாலை 02.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ராமநாத சுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜை நடத்திய பிறகு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் ராமர் ஆகியோர் விபீஷணர் பட்டாபிஷேக விழாவுக்காக கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்வார்கள்.

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு- இந்த நாளில் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள் | Rameshwaram Temple Is Closed On June 04 2025 News

அதனால் அன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை அடைப்படுவதுடன், ஜூன் 04ம் தேதி அன்று ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேலும், ஜூன் 04ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு கோதண்ட ராமர் கோவிலில் இருந்து ராமர், ராமநாத சுவாமி கோவிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூன் 05ம் தேதி கோவிலுக்குள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஜூன் 4 ஆம் தேதி பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் செய்யும் திட்டம் வைத்திருந்தால் இந்த விழா நிகழ்ச்சிகளை கணக்கில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு கொண்டால் சில சிரமங்களை தவிர்த்து கொள்ளலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US