உங்கள் கனவில் கல்லறை, சடலம், இறுதி ஊர்வலம் வருகிறதா? இது தான் அர்த்தமாம்
மனிதனுக்கு கனவு என்பது தடுக்கவே முடியாத ஒன்றாகும். அப்படியாக, சாஸ்திரங்களில் நமக்கு வரும் கனவுகளுக்கு பின்னால் பல காரணங்களும் அர்த்தங்களும் இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் ஒரு சிலருக்கு தங்கள் கனவில் காண்பது நிஜ வாழ்க்கையில் நடக்கும் அதிசயமும் நாம் பார்த்திருப்போம்.
அப்படியாக, ஒருவர் கனவில் இறந்தவரின் சடலமும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது போல் வருவதையும் நாம் பார்க்கின்றோம். இவ்வாறான கனவுகள் வந்தால் நாம் கட்டாயம் பயமும் பதட்டமும் அடைவோம்.
மறுநாள் முழுவதும் அந்த கனவுகளை பற்றிய சிந்தனையே நம் மனம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கும். அந்த வகையில் ஒருவர் கனவில் கல்லறை, அல்லது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது போல் வருவது நன்மையே குறிப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது, கனவில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது போல் வந்தால் நம்முடைய நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறுவதாக சொல்கிறார்கள். அதே போல், கல்லறைக்கு செல்வது போல் கனவு வந்தாலும் நன்மையே குறிக்கிறது.
அவை நம் வாழ்வில் உள்ள நீண்ட பிரச்சனையை முடிவிற்கு வருவதின் அறிகுறியாக சொல்கிறார்கள். அதனால், இவ்வாறான கனவு வந்தால் ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் நடந்து விடுமோ என்று எண்ணி மனதை குழப்பிக்கொள்ளமால் எழுந்து தண்ணீர் குடித்து விட்டு உறங்குவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |