ஓணத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு
By Yashini
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கேரள மாநிலத்தில் இந்தாண்டு வரும் 15ஆம் திகதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற செப் 13ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து வழங்கப்படும்.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21ஆம் திகதி வரை நடை திறக்கப்படவுள்ளது.
எனவே, பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US