வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக 10 வகை சாம்பிராணி தூபம் போடுங்கள்

By Sakthi Raj Sep 10, 2024 12:30 PM GMT
Report

சாம்பிராணி தூபம் போடுதல் என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு முக்கிய பழக்கமாகும்.அப்படியாக வீட்டில் சாம்பிராணி போட்டால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் வரும்.அப்படியாக தசாங்கம் என்பது தூபம் போட பயன்படும் ஒரு வகை சாம்பிராணி ஆகும்.

ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் ஒரு பொருள். அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு பொருள் இந்த தசாங்கம்.

இப்பொழுது இந்த தசாங்கத்தில் உள்ள அற்புத பலன்களை பற்றி பார்ப்போம். தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.

வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக 10 வகை சாம்பிராணி தூபம் போடுங்கள் | Sambirani Thubam Worship

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது. இவை சித்தர் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

1. வெட்டி வேர்

2. லவங்கம்

3. வெள்ளை குங்குலியம்

4. ஜாதிக்காய்

5. மட்டிப்பால்

வீட்டில் கெட்ட நேரம் இருப்பதை உணர்த்தும் அறிகுறி

வீட்டில் கெட்ட நேரம் இருப்பதை உணர்த்தும் அறிகுறி


6. சந்தான தூள்

7. நாட்டு சர்க்கரை

8. திருவட்ட பச்சை

9. சாம்பிராணி

10. கீச்சிலிகிழங்கு

என்ற இந்த 10 பொருட்கள் சாம்பிராணியில் சேர்க்க பட்டு இருக்கிறது.

வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக 10 வகை சாம்பிராணி தூபம் போடுங்கள் | Sambirani Thubam Worship

இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உடையது என்று குறிப்பிடத்தக்கது.இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும்.

திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். தசாங்கம் தூபம் போடுவதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் இருந்தால் உடனே விலகும்.

இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். தசாங்கம் ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இறைவனுக்கு காண்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம்.

தசாங்கம் வீட்டில் உபயோகிப்பதால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெற்று வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US