ஒரே ஒரு செயல்! எளிய பரிகாரத்தால் வாழ்க்கையே மாறிடும்
சனிக்கிழமையன்று எளிய பரிகாரம் செய்வதன் மூலம் நீங்கள் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதுடன் உங்களது பேச்சுகளுக்கு மரியாதையும் கூடிவிடும்.
சிலருக்கு வழமையாக பேசுவது கூட பிரச்சனைகளுக்கு கொண்டு வரும், சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சனைகளுக்கு அஸ்திவாரம் போட்டு விடும்.
வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகம், வெளியில் சென்றால் கூட தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்வார்கள்.
அதுவும் சொந்த தொழில் என்றால் சிக்கலுக்கு மேல் சிக்கல் தான், இதனால் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை இழக்க நேரிடும்.
இவர்களுக்கான மிக எளிய பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், உங்களது வார்த்தைகளுக்கான மதிப்பு கூடவும் இந்த பரிகாரத்தை செய்து வரலாம்.
வாரந்தோறும் சனிக்கிழமை காலை வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவ அபிஷேகத்திற்கு தேன் வாங்கி கொடுக்கவும்.
அத்துடன் அபிஷேகம் செய்த தேனை வாங்கி பிரசாதமாக சாப்பிட்டு வருவதும் பலனைத்தரும்.