சுக்கிரன் குரு இணைந்த ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதில் கவனமாக இருங்கள்
ஜனன ஜாதகத்தில் குரு பகவான் தான் ஒருவரின் அறிவு, ஞானம், ஆன்மீக ஈடுபாடு, நல்லொழுக்கம், தர்மம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறார். அதே போல், களத்திரகாரகன், வெள்ளி என்று அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர்கள் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறார்கள்.
அப்படியாக, இந்த சுக்கிரன் மற்றும் குரு இருவரும் ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெற்று இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள்.
இவர்களுக்கு பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. எப்பொழுதும் இந்த ஜாதகர் வங்கி கணக்கில் பணம் இருந்து கொண்டு இருக்கும். ஜாதகர் குடும்பத்தில் அதிகமான தங்க மற்றும் வெள்ளி நகை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
அதோடு இந்த ஜாதகர் இருக்கும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார். ஜாதகர் எதை செய்தாலும் அழகான அமைப்புகளோடு செய்வார். அவ்வாறன விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்வார்.
அதே போல், ஜாதகர் உணவு விஷயங்களில் சுவையாக இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்வார். இவ்வாறான அமைப்புகள் கொண்ட ஆண் மற்றும் பெண் ஜாதகர் இருவருக்கும் வண்டி வாகனத்தில் அதிக அளவில் ஆர்வம் இருக்கும்.
இருப்பினும், ஜாதகருக்கு திருமண வாழ்வில் சில சிக்கல் உண்டாகும். இந்த அமைப்புகள் கொண்டவர்கள் தான் பச்சை குத்தி (tattoo)கொள்ளும் பழக்கம் இருக்கும்.
இருந்தாலும் ஜாதகர் எவ்வளவு சுகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்களோ அவ்வளவு பிரச்சனையும் சந்திக்க நேரிடும். அதாவது அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த கிரக சேர்க்கை கொண்ட நபர்களுக்கு அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |