புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரியன் ராகு இணைவு- உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் தந்தையை குறிக்கும் முக்கியமான கிரகம் ஆகும். இவரை ஆதவன், பாஸ்கரன்,ஆத்ம காரகன் என்று அழைப்பார்கள். அப்படியாக, இந்த சூரியன் ஒருவர் ஜாதகத்தில் இருள் கிரகமான ராகுவுடன் இணைந்து இருக்கும் பொழுது அந்த ஜாதகர் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் ராகு இணைவு இருந்தால் அந்த ஜாதகருக்கு தன் தந்தை உடனான பிணைப்பு அவ்வளவு இனிமையாக இருக்காது. பெரும்பாலும் இவர்கள் தங்கள் தந்தையை பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருப்பார்கள், அல்லது ஒரே வீட்டில் இருவரும் பேசாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
அதோடு ஜாதகருக்கு தந்தை உடனான சொந்தங்கள் உடனும் நல்ல உறவுமுறை இருக்காது. இவ்வாறான அமைப்புகள் கொண்ட ஜாதகர் பெரும்பாலும் அவர்கள் பூர்வீகத்தை விட்டு வெளியே வந்து தான் வாழ்வார்கள்.
இருப்பினும், ஜாதகரின் தாத்தா, அல்லது தந்தை அரசாங்க பதவியில் இருப்பார்கள். இவ்வாறான அமைப்புகள் கொண்ட ஜாதகர் எந்த ஒரு சிக்கல்களில் சிக்கவில்லை என்றாலும் சமயங்களில் இவர்கள் பெயருக்கும், புகழுக்கும் கெளரவத்திற்கு கலங்கம் ஏற்படும்.
இந்த அமைப்புகள் கொண்ட ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அதோடு, சிலர் கீழ் நிலையான வேலையை செய்ய வைக்கும் இந்த கிரக அமைப்புகள். இந்த சூரியன் ராகு இருப்பதால், சிலரின் தந்தை தீயப்பழக்கத்திற்கு ஆளாகலாம் அல்லது தந்தைக்கு இருதார அமைப்பு இருக்கும்.
இவர்களுக்கு அடிக்கடி உடல் தொந்தரவுகள் உண்டாகும். இருப்பினும் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலிமையாக அமர்ந்து குருபகவான் பார்வையையும் பெற்று இருந்தால் அந்த ஜாதகரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விடும் இந்த கிரக அமைப்புகள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |