வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரம்

By Sakthi Raj Jun 20, 2025 08:32 AM GMT
Report

இந்த உலகில் நல்ல சக்திகளுக்கு எதிராக தீய சக்தி இருக்கின்றது என்பதை நாம் கட்டாயம் சில சூழ்நிலைகளில் உணரலாம். அப்படியாக, வீடுகளில் தீய சக்திகள் சூழ்ந்து விட்டால் அவை அந்த குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்து, எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளையும் நிம்மதியாக நடத்த விடாது.

அதாவது, தீய சக்திகள் என்பது ஏவல் பில்லி சூனியம், ஆவி பிசாசு இவைகளை மட்டும் சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு உருவாகும் கெட்ட நேரமும் அவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தை கொடுத்து விடும். எப்பொழுதும் சண்டை, நிம்மதியின்மை, பொருளாதார சிக்கல் போன்ற சூழ்நிலையை உருவாக்கும்.

அவ்வாறு கெட்ட நேரத்தால் செய்வதறியாது தவிப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம். இந்த பரிகாரத்தை திதியை வளர்பிறை வெள்ளிக்கிழமையில் செய்வது தான் சிறந்த பலன் கொடுக்கும்.

வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரம் | Theeya Sakthigal Vilaga Parigarangal

இந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி புதன்கிழமை அமாவாசை திதியானது வர இருக்கிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆகும். இந்த நாளில் நாம் பரிகாரத்தை செய்வது மிக சிறப்பாக அமையும். இந்த பரிகாரத்திற்கு கற்றாழையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் கற்றாழையை வைத்திருப்பவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம், முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிகொள்ளலாம். வாங்கிய அந்த கற்றாழையை அருகில் இருக்கும் அம்மன் ஆலயங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எந்த கிழமைகளில் எந்த விஷயங்கள் செய்வதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்?

எந்த கிழமைகளில் எந்த விஷயங்கள் செய்வதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்?

அதாவது வீட்டின் அருகில் இருக்கும் பிரத்யங்கரா, பத்ரகாளி, வாராஹி, அங்காள பரமேஸ்வரி, இதுபோல ஏதேனும் உக்கிரமான அம்மன் தெய்வங்கள் இருந்தால், அந்த கோவிலில் இந்த கற்றாழையை முடிந்தால் அம்மன் பாதத்தில் வைத்து, ஒரு பூஜை செய்து, மனதார அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரம் | Theeya Sakthigal Vilaga Parigarangal

பிறகு அந்த கற்றாழையை வீட்டிற்கு எடுத்து வந்து குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி உங்கள் நிலைவாசல் படியில் கட்டி தொங்க விட்டால் கட்டாயம் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகுவதோடு, மேற்கொண்டு தீய சக்திகளை உங்கள் வீட்டை நெருங்காது.

மேலும், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்கும் அளவை பொறுத்து அந்த கற்றாழை வாடிப்போகும். பிறகு வாடிய அந்த கற்றாழையை நாம் உடனடியாக அகற்றி விடவேண்டும். இதை முழு மனதார ஒருமுறை செய்து பாருங்கள் வீட்டில் கட்டாயம் நடக்கும் மாற்றங்களை காணலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US