Numerology : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பணப்பிரச்சனையே வராதாம்... அதிர்ஷ்டசாலியாம்
எண் கணிதத்தின் படி, எந்தெந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பண பிரச்சனையே வராது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எண் கணிதம்
எண் கணிதம் என்பது ஒருவர் பிறந்த தேதியினை வைத்து அவர்களது ஆளுமை, வாழ்க்கை முறை, ஆன்மீக நுண்ணறிவு இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.
இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பிறந்தவர்கள், அதிர்ஷ்டசாலியாகவும், பணப்பிரச்சனையை சந்திக்காதவர்களாகவும் இருப்பார்களாம்.
அந்த வகையில் 6,15,24 என்ற எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும், பண பிரச்சனை வராதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எண் 6
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அருள் எப்பொழுதும் பெற்றுக்கொள்வார்களாம். வசதியாக இருக்கும் இவர்கள், பண பற்றாக்குறையை ஒருபோதும் சந்திக்கவே மாட்டார்களாம்.
மேலும் இயல்பிலே கண்ணியமானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருக்கும் இவர்கள் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள். கடின உழைப்பாளியாகவும், நேர்மையானவராகவும் இருப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
எண் 15
15ம் தேதி பிறந்தவர்களும் சொத்து மற்றும் செல்வங்களுடன் ஆடம்பரமாக வாழ்வார்களாம். சுக்கிரனின் அருளால் பணப்பற்றாக்குறை இவர்களுக்கு குறையவே செய்யாதாம்.
லட்சுமி தேவியின் அருளும் இவர்களுக்கு கிடைப்பதால், வாழ்க்கையில் வரும் சவால்களை சுலபமாக எதிர்கொள்வார்களாம். முக்கியமாக தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.
எண் 24
நீங்கள் 24ம் தேதியில் பிறந்தவர்கள் என்றால் வசதியாக வாழ்வதுடன், அழகாகவும் இருப்பீர்களாம். மகாலட்சுமியின் அருள் நிரம்பியிருக்கும் நிலையில், வாழ்க்கையில் ஒருபோதும் பண பிரச்சனையை எதிர்கொள்ளவே மாட்டார்கள்.
மேலும் இவர்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவர்கள் என்பதால் வெற்றியின் கதவு எப்போதுமே தெரிந்திருக்கும். மேலும் இவர்களது திருமண வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |