நம்முடைய தோஷங்கள் விலக வீடுகளில் செய்யவேண்டிய எளிய பரிகாரங்கள்
நம்முடைய ஜாதகத்தில் சில மாறுப்பட்ட கிரக இணைவுகளால் நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதை நாம் தோஷம் என்று சொல்லுவோம். அப்படியாக, ஜோதிடர்கள் இந்த தோஷத்தை கழிக்க சில பரிகாரங்கள் சொல்லுவார்கள். சில பரிகாரங்களை நாம் வீடுகளில் மிக எளிமையாக செய்து விடலாம். அதைப் பற்றி பார்ப்போம்.
1) ஜாதகதில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் உறங்கும் பொழுது தலைக்கு அருகே நீரை வைத்து, தூங்கி எழுந்த பிறகு அந்த நீரை காலையில் செடிகளுக்கு ஊற்றினால் நமக்கு உண்டான சுக்கிர தோஷம் படிப்படியாக குறையும்.
2) வாழ்க்கையில் புகழின் உச்சிக்கு செல்ல அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு மட்டும் பொங்கல் கொடுத்து வந்தால் சந்திரனின் அருளால் நாம் மிக பெரிய புகழின் உச்சிக்கு செல்வோம்.
3) சனியால் உண்டான பாதிப்புகள் விலக ஏழை குடும்பத்திற்கு ஈமச் சடங்குகள் செய்ய பணம் , பொருள் கொடுத்து உதவி செய்தால் நம்முடைய கடின காலங்கள் விலகும்.
4) வாழ்க்கை இருள் சூழ்ந்து காணப்பட்டால் சிதலம் அடைந்த கோயில்களுக்கு நீர்நிலை மற்றும் தண்ணீர் தொட்டிஅமைத்து கொடுப்பது, போன்ற உதவிகள் செய்தால் தேவதைகளின் ஆசீர்வாதம் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றமும் முகத்தில் தெளிவும் கிடைக்கும்.
5) சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்த உயிர்களுக்கும் உணவு வழங்குவதும், தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு பண உதவி செய்வதும் அவர்களுக்கு சூரியனால் உண்டான பாதிப்புகள் விலகி வம்ச விருத்தி செய்யும்.
6) பாழடைந்த சிவன் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது பிரதோஷ நாளில் சிவ தலங்களுக்கு முடிந்த அளவிலான பொருட்களை அபிஷேகத்திற்கு வழங்குதல், வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால் தேவர்களை சாந்தி படுத்திவிடும். இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |