பணக்கஷ்டம் விலக வியாழக்கிழமை குபேர வழிபாட்டை செய்யுங்கள்

By Sakthi Raj Sep 12, 2024 05:30 AM GMT
Report

குபேரன் பணத்திற்கு அதிபதியான கடவுள்.வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் குபேரரை வழிபட்டால் பண வரவு சீராகும்.அப்படியாக குபேர பகவானை வழிபட வியாழக்கிழமை உகந்தது ஆகும்.குபேரன் வழிபாட்டிற்கு ஏற்ற இலை ஒன்று இருக்கிறது.

அந்த இலை வைத்து வழிபட வீட்டில் செல்வா வளம் பெருகும்.அதை பற்றி பார்ப்போம். பொதுவாக இந்த இலை வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் உடைய ஆதிக்கம் அதிகரித்து காணப்படும்.மேலும் இலை கொண்ட செடியை சுற்றிலும் ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும்.

அந்த ஈர்ப்பு நல்ல விஷயங்களை நமக்கு வீட்டிற்கு வழங்கும். கெட்ட விஷயங்களை அகற்றிவிடும்.இவ்வளவு அற்புதமான செடி கண்டிப்பாக எல்லோருடைய வீட்டில் இருக்கும்.பொதுவாக பெண்கள் இருக்கும் வீட்டில் நிட்சயமாக இருக்கும்.

பணக்கஷ்டம் விலக வியாழக்கிழமை குபேர வழிபாட்டை செய்யுங்கள் | Thursday Kuberan Worship

மருதாணி செடிக்கு நல்ல சக்திகளை வெளியிடக்கூடிய ஆற்றல் உண்டு. அதன் இலைகளைக் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது லட்சுமி குபேரருடைய அருளைப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் தேடிக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேரர் படத்திற்கு முன்பு ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மேல் மருதாணி இலைகளை பரப்பி அதன் மீது சில நாணயங்களை வைக்க வேண்டும்.ஏனெனில் நாணயங்களில் மகாலட்சுமி வாசம் புரிகிறாள். மகாலட்சுமிக்கு உகந்த ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையும் இலைகளின் மீது தூவிக் கொள்ளலாம்.

பணக்கஷ்டம் விலக வியாழக்கிழமை குபேர வழிபாட்டை செய்யுங்கள் | Thursday Kuberan Worship

பின்னர் சுத்தமான அகல் விளக்கு ஒன்றை மஞ்சள், குங்குமம் தடவி நடுவில் அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தாமல் பின்னர் பஞ்சு திரி இட்டு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி தீபமேற்ற வேண்டும்.

கிழக்கில் மகாலட்சுமியும், வடக்கில் குபேரனும் இருக்கின்றனர். தீபம் ஏற்றிய பின்பு தீபத்திற்குள் பச்சை கற்பூரம், கற்கண்டு, டைமண்ட் கற்கண்டு போன்றவை இருந்தால் அதனையும் சேர்த்து கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக 10 வகை சாம்பிராணி தூபம் போடுங்கள்

வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக 10 வகை சாம்பிராணி தூபம் போடுங்கள்


இவை அத்தனையும் நமக்கு செல்வத்தையும், பணத்தையும் ஈர்த்து தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த பொருட்கள் ஆகும்.வியாழக்கிழமையில் குபேரனுக்கும், வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கும் இந்த மருதாணி இலையில் தீபம் ஏற்றி வைக்கலாம்.

மேலும்,அந்தந்த கிழமைகளில் அவரவருக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சிறப்பானவை ஆகும்.

இப்படி வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் குபேர வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வீட்டில் பல நாள் உண்டான தடங்கல் வராத பணம் கைக்கு வந்து வீட்டில் எல்லா செல்வா வளமும் பெருகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US